பிரபல கோமள விலாஸ் ஹோட்டலில், பிரதமர் மோடிக்கு மசால் தோசை விருந்து

 சிங்கப்பூரில் உள்ள பிரபல கோமள விலாஸ் ஹோட்டலில்,  பிரதமர் மோடிக்கு மசால் தோசை விருந்தளித்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ .

இந்திய பிரதமர் நரேந்திரமோடி, முதன் முறையாக சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள பிரபல இந்திய ஹோட்டலான, கோமள விலாசில் மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் நேற்று விருந்தளித்தார்.

இதில் என்ன விஷேசம் என்னவென்றால், தலைவர்கள் இருவரும் அந்த ஹோட்டலுக்கு நேரடியாக சென்று விருந்து உண்டதுதான்..

இட்லி, தோசை, சாதவகைகளை மட்டும் விற்றுவந்த இவ்வுணவகத்தை பிரபல உணவகமாக உயர்த்தியவர் திரு முருகையா ராஜு.

நான்கு சகோதரர்கள் ஒருசகோதரி என பெரிய குடும்பத்தில் பிறந்த திரு ராஜு 15 வயதில் பிழைப்புதேடி 1937ஆம் ஆண்டு தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் வந்தார். "கருணானந்த விலாஸ்" என அழைக்கபட்ட உணவகத்தில் துப்புரவுத் தொழிலாளராக அவர் வேலை செய்யத்தொடங்கினார்.

அதன்பின்னர் அவரது மகன் தன சேகருடன் இணைந்து ஒரு சிறிய உணவகத்தினை துவங்கினார். "கோமளாஸ்" என்ற பெயரில் விரைவு உண வகத்தை 1995ம் ஆண்டு தொடங்கிய தன சேகரன் முதல் சைவ இந்திய விரைவு உணவகத்தை அறிமுகப் படுத்தி தனக்கென உணவக துறையில் முத்திரை பதித்தார்.  

தற்போது இந்த ஹோட்டலை அவரதுபேரனான ராஜ்குமார் நிர்வாகித்து வருகின்றார். அங்கு உணவருந்திய பிரதமர் மோடி, இந்திய உணவுகளான இட்லி, வடை, தோசையை ரசித்து உண்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...