பிரபல கோமள விலாஸ் ஹோட்டலில், பிரதமர் மோடிக்கு மசால் தோசை விருந்து

 சிங்கப்பூரில் உள்ள பிரபல கோமள விலாஸ் ஹோட்டலில்,  பிரதமர் மோடிக்கு மசால் தோசை விருந்தளித்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ .

இந்திய பிரதமர் நரேந்திரமோடி, முதன் முறையாக சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள பிரபல இந்திய ஹோட்டலான, கோமள விலாசில் மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் நேற்று விருந்தளித்தார்.

இதில் என்ன விஷேசம் என்னவென்றால், தலைவர்கள் இருவரும் அந்த ஹோட்டலுக்கு நேரடியாக சென்று விருந்து உண்டதுதான்..

இட்லி, தோசை, சாதவகைகளை மட்டும் விற்றுவந்த இவ்வுணவகத்தை பிரபல உணவகமாக உயர்த்தியவர் திரு முருகையா ராஜு.

நான்கு சகோதரர்கள் ஒருசகோதரி என பெரிய குடும்பத்தில் பிறந்த திரு ராஜு 15 வயதில் பிழைப்புதேடி 1937ஆம் ஆண்டு தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் வந்தார். "கருணானந்த விலாஸ்" என அழைக்கபட்ட உணவகத்தில் துப்புரவுத் தொழிலாளராக அவர் வேலை செய்யத்தொடங்கினார்.

அதன்பின்னர் அவரது மகன் தன சேகருடன் இணைந்து ஒரு சிறிய உணவகத்தினை துவங்கினார். "கோமளாஸ்" என்ற பெயரில் விரைவு உண வகத்தை 1995ம் ஆண்டு தொடங்கிய தன சேகரன் முதல் சைவ இந்திய விரைவு உணவகத்தை அறிமுகப் படுத்தி தனக்கென உணவக துறையில் முத்திரை பதித்தார்.  

தற்போது இந்த ஹோட்டலை அவரதுபேரனான ராஜ்குமார் நிர்வாகித்து வருகின்றார். அங்கு உணவருந்திய பிரதமர் மோடி, இந்திய உணவுகளான இட்லி, வடை, தோசையை ரசித்து உண்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...