கடலூர் நகரமே வெள்ளத்தில் மிதந்துவருகிறது

கடலூர் மாவட்டத்தில் மீண்டும் கொட்டிவரும் பலத்த மழையால் கெடிலம் ஆற்றின் கரை உடைந்ததால் கடலூர் நகரமே வெள்ளத்தில் மிதந்துவருகிறது. தனித் தீவாக மாறிய கடலூர் மாவட்டத்தை கண்டுகொள்ள ஆள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் தவித்துவருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு முதல்நாள் அதாவது நவம்பர் 8ம்தேதி பெய்த கனமழையால் கடலூர் மாவட்டமே வெள்ளக் கடாக மாறியது. மாவட்ட மக்களுக்கு நிவாரண பணிகள் மேற்கொள்ளப் பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பிவந்த நிலையில் கடந்த 3 நாட்ளாக கடலூர் மாவட்டத்தில் மீண்டும் கொட்டிய கனமழையால் மீண்டும் வெள்ளம் சூழ்ந்து தீவுபோல் காட்சி அளிக்கிறது.

கடலூர் நகரில் அனைத்து தெருக்களிலும் 2 அடி உயரத்துக்கு தண்ணீர்தேங்கி உள்ளது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப் படுகின்றது. பலர் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் வீட்டிலேயே முடங்கி போய் உள்ளனர். கரை புரண்ட வெள்ளம் கடலூர் நகரில் பெரும் பாலான கடைகள் மூடியே கிடக்கிறது. கடந்த 3 நாட்களாக பெய்த பலத்தமழையால் கெடிலம் ஆறு, தென் பெண்ணையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர கிராம மக்கள் வெளியேற்றபட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

மழையால் பாதிப்புக் குள்ளானவர்களை மீட்டு தங்கவைக்க 100க்கும் மேற்பட்ட முகாம்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இந்தமுகாம்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப் பட்டுள்ளன.

 தொடர் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வழி கின்றன. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகள் உடையாமல் தடுக்க ஏரிகளைசுற்றி மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப் பட்டுள்ளன. 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் தற்போது 3 வது முறையாக மீண்டும் பலத்த மழை பெய்துவருகிறது. கெடிலம் ஆற்றில் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் சீறிபாய்வதால் கெடிலம் ஆற்றின் கரைகள் உடைந்து. 50க்கும் மேற்பட்ட நகர்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...