தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ரயில் சேவை L -முருகன் தொடங்கிவைத்தார்

தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் இடையே புதிதாக வாரம் இரு முறை ரயில் சேவை இயக்கவும், கோவை-மேட்டுப்பாளையம் மெமு ரயில் சேவையை போத்தனூர் வரை நீட்டிக்கவும், கோவை- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சாமல்பட்டியில் புதிய ரயில் நிறுத்தம் ஏற்படுத்தவும், மைசூரு- மயிலாடுதுறை எக்ஸ்பிரசை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கவும், தற்போது வாரம் 5 நாள் இயக்கப்படும் மயிலாடுதுறை- திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக மாற்றவும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 8.20 மணிக்கும், பகல் 13.05-க்கும் புறப்பட்டு கோவை வரை இயக்கப்பட்ட மெமு ரயில்கள் போத்தனூர் சந்திப்பு வரை நீட்டிக்கப்படுகிறது. கோவையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஞாயிறு தவிர பிற நாட்களில் இயக்கப்பட்டு வந்த ரயிலும் இனி போத்தனூரிலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நீட்டிக்கப்பட்ட ரயில் போக்குவரத்தின் முதலாவது சிறப்பு ரயில் சேவையை மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் 2024 ஜூலை 19 காலை 10.55 மணியளவில் மேட்டுப்பாளையத்திலிருந்து கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆ ராசா, சட்டமன்ற உறுப்பினர்
திரு ஏ கே செல்வராஜ், மேட்டுப்பாளையம் நகர்மன்ற தலைவர் எமகரிபா பர்வின் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிக்கின்றனர்.

தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை ரயில், 2024 ஜூலை 20 முதல் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தூத்துக்குடியில் இருந்து இரவு 22.50 மணிக்கு புறப்பட்டு வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமை காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 19.35 மணிக்கு புறப்பட்டு சனி மற்றும் திங்கட் கிழமை காலை 4.20 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும்.

மேலும் கோவை- திருப்பதி ரயிலுக்கு சாமல்பட்டியில் வழங்கப்பட்டுள்ள புதிய நிறுத்தம் வரும் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

மைசூர்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்ட சேவையையும் அமைச்சர் எல் முருகன், மேட்டுப்பாளையத்திலிருந்து 19-ம் தேதி காலை 10.55 மணியளவில் காணொலி வாயிலாக தொடங்கிவைக்க உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...