ஊழலுக்கு எதிராக பாஜக தொடர்ந்து செயல்படும்

பாஜக சார்பில், ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பாஜக தமிழக மாநிலத்தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த நடை பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூலை 28) ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நாடாளுமன்ற தொகுதிவாரியாக நடைபயணம் மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளது.

இந்த நடை பயணத்தில் பங்கேற்பதற்காக ராமேஸ்வரம் செல்ல மதுரைவிமான நிலையம்வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘‘பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் விளக்குவதற் காகவே இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடை பயணத்தின் மூலம் பாஜக அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத் திட்டங்களை மக்களிடம் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். இந்த நடை பயணத்தில் பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனையை விளக்கக்கூடிய ஒரு லட்சம் புத்தகங்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு 168 நாட்கள், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் நாடாளுமன்ற தொகுதி வாரியாக 1700 கிலோ மீட்டர் தொலைவு நடை பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டு இருக்கிறோம்.

இதில் பங்கேற்க கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். திமுக அரசு மீது அமலாக்கத் துறை முன்வைக்கும் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் வாய் திறக்கவேண்டும். ‘தொட்டுப்பார், சீண்டிப்பார்’ என்று ஒரு முதலமைச்சர் பேசுவது அழகு கிடையாது. ஊழலுக்கு எதிராக பாஜக தொடர்ந்து செயல்படும்.

மேலும், கடலூர் மாவட்டத்தில் என்எல்சி விரிவாக்கத்துக்காக விளை நிலங்களை அழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடலூரில் விவசாயிகளை சிரமப்படுத்தி விட்டு திருச்சியில் வேளாண் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்திருக்கிறார்” என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...