வங்கதேச மக்களின் மனதை தொட்டுவிட்டார் மோடி

வங்க தேசத்துடனான நில பரிமாற்ற விவகாரத்துக்கு முயற்சிமேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு வங்கதேச முன்னாள் அதிபர் ஹெச்.எம்.இர்ஷாத் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 மேற்குவங்க மாநிலம் கூச்பெஹர் மாவட்டம், தின்ஹட்டாவில் உள்ள சொந்த ஊருக்கு வங்கதேசத்தின் முன்னாள் அதிபர் ஹெச்.எம்.இர்ஷாத் செவ்வாய்க் கிழமை வந்தார்.

 அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவுக்கும்,  வங்க தேசத்துக்கும் இடையேயான நில பரிமாற்ற பிரச்னை நீண்ட காலமாக நிலவிவந்தது. இந்நிலையில், இந்திய நாடாளு மன்றத்தில் நில பரிமாற்ற மசோதா தாக்கல் செய்யப் பட்டவிதம் மிகவும் பாராட்டுதலுக்குரியது.

இது, பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் மட்டுமே சாத்தியமானது. அவருக்கு எனது நன்றிகள். மசோதாவை தாக்கல்செய்ததன் மூலம் வங்கதேச மக்களின் மனதை தொட்டுவிட்டார் மோடி என்றார்.

 நில எல்லை ஒப்பந்தம் அமல்படுத்தப் பட்டதை அடுத்து, கடந்த ஜூலை மாதம்முதல் இந்தியா- வங்கதேசம் இடையே பதற்றம் நிறைந்த 162 பகுதிகள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டன.  மேலும், 7,110 ஏக்கர்கொண்ட 51 பகுதிகளை இந்தியாவும், 17,160 ஏக்கர் கொண்ட 111 பகுதிகளை வங்க தேசமும் பரிமாறி கொள்ளவுள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...