வங்க தேசத்தவர்களுக்கு மருத்துவ விசா -மோடி அறிவிப்பு

புதுடில்லி : பிரதமர் மோடி வங்கதேசம் வர வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்துள்ளார். வங்கதேசத்தவர்களுக்கு மின்னணு முறையில் மருத்துவ விசா மற்றும் அந்நாட்டில் மற்றொரு தூதரக அலுவலகம் திறக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார்.

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து இரு தலைவர்கள் முன்னிலையில் டிஜிட்டல் டொமைன், பசுமை ஒத்துழைப்பு, கடலோர பாதுகாப்பு மற்றும் நீலப்புரட்சி ரயில்வே ஆகிய துறைகளில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.பிறகு இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

நரேந்திர மோடி கூறியதாவது: இரு நாடுகள் இடையே இந்திய ரூபாயில் வர்த்தகம் நடக்கிறது. வங்கதேசத்தில் இருந்து இந்திய வழியாக நேபாளத்திற்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இவை அனைத்தும் இரு நாடுகள் இடையே வளர்ந்து வரும் உறவை எடுத்துக் காட்டுகிறது. வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்காக மின்னணு மருத்துவ விசா வசதி அறிமுகம் செய்யப்படும்.
தூதரக அலுவலகம்
வங்கதேசத்தின் ரங்கப்பூரில் புதிய துணைத் தூதரக அலுவலகம் திறக்கப்படும். இந்தியாவின் பெரிய வளர்ச்சி கூட்டாளியாக வங்கதேசம் உள்ளது. அந்நாட்டுடனான உறவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். 1996 கங்கை நதி ஒப்பந்தத்தை புதுப்பித்தல் குறித்து ஆலோசிக்க தொழில்நுட்ப ரீதியில் ஆலோசனை நடத்தப்படும். உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மோதும் இந்திய வங்கதேச அணிகளுக்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.
பிறகு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறுகையில், இரு நாட்டு உறவை வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடி வங்கதேசத்திற்கு வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன் என்றார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலு ...

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரை பற்றி மோடி  விளக்கம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரை, விரிவானதாக ...

நாடாளுமன்றத்தில் குடியரசுத்தல ...

நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரை மாண்புமிகு உறுப்பினர்களே, 1.18-வது மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் ...

மாநிலங்களவை 264-வது அமர்வையொட்டி ...

மாநிலங்களவை 264-வது அமர்வையொட்டி ஜெக்தீப் தன்கர் ஆற்றிய உரை மாண்புமிகு உறுப்பினர்களே, மாநிலங்களவையின் 264-வது அமர்வு தொடங்குவதையொட்டி, உங்கள் ...

உதயநிதி வெளியிட்ட புதிய லோகோ- வ ...

உதயநிதி வெளியிட்ட புதிய லோகோ- விளையாட்டு வீரர்கள் அதிருப்தி அமைச்சர் உதயநிதி வெளியிட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய 'லோகோ' ...

செங்கோல் நேர்மையான ஆட்சியின் அ ...

செங்கோல் நேர்மையான ஆட்சியின் அடையாளம் -L .முருகன் பேட்டி ஆட்சி நேர்மையாகவும், நீதி தவறாமல் இருக்கவும் சோழர்கள் பயன்படுத்தியதுதான் ...

மக்களவை தலைவருக்கு மோடி பாராட் ...

மக்களவை தலைவருக்கு மோடி பாராட்டு அவசர நிலை மற்றும் அதனால் ஏற்பட்ட அதிகப்படியான அத்துமீறல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...