பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் கடந்த வாரம் தொலைபேசி வாயிலாக பேசினர். அப்போது, இரு நாட்டு உறவுகள் குறித்தும், அண்டை நாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று விளக்கமளித்தார்.
அவர் கூறியதாவது:
வங்கதேச மாணவர்களின் இடஒதுக்கீடு போராட்டம் காரணமாக இந்தியா – வங்கதேசம் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான பல கூட்டுத் திட்டங்களும் முடங்கிஉள்ளன. கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நம் பிரதமருடன் தொலைபேசியில் உரையாடியபோது, இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதேபோல், வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு இந்தியா தான் காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டது குறித்தும் இருநாட்டு தலைவர்கள் பேசினர்.
இந்த விவகாரத்தில் இந்தியா அளித்த உண்மையான விபரங்களை புறக்கணித்து பொய்யான தகவல்களை வங்கதேச ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. நீர்வள மேலாண்மைக்காக இரு நாடுகளின் கூட்டு வழிமுறைகள் சரியான திசையில் செல்வது தொடர்பான தகவல்கள் புறக்கணிக்கப்பட்டு, தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |