பக்தர்களின் கோவிந்தா… கோவிந்தா கோஷம் முழங்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டது

பக்தர்களின் கோவிந்தா… கோவிந்தா கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோவில் சொர்க்கவாசல் நேற்று அதிகாலை திறக்கப்பட்டது.பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் முதலாவதாக உள்ளது. ஆண்டு தோறும், ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். நேற்று அதி காலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக அதிகாலை, 3:45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ் தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்ளிட்ட பல்வேறு திருவா பரணங்களை அணிந்து புறப்பட்டார்.ராஜ மகேந்திரன் சுற்று வலம்வந்து, நாழிக் கேட்டான் வாசல் வழியாக, குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்கக்கொடி மரத்தை சுற்றி, துறை பிரகாரம் வழியாக அதிகாலை, 4:30 மணிக்கு சொர்க்கவாசல் பகுதியை அடைந்தார்.பட்டர்களின் வேதபாராயணங்களை கேட்டருளிய நம்பெருமாள், அதிகாலை, 5:00 மணிக்கு பரமபத வாசல் என்னும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும், கடந்துசென்றார். நம்பெருமாளின் வருகைக்காக காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், 'கோவிந்தா… கோவிந்தா' என, கோஷம் எழுப்பியபடி சொர்க்க வாசலை கடந்து சென்றனர்.


சொர்க்கவாசலில் இருந்து வெளியேறிய நம்பெருமாள், ஆயிரங்கால் மண்டபம் முன் அமைத்திருந்த திருக்கொட்டகைக்கு, அதிகாலை, 5:15 மணிக்கு வந்துசேர்ந்தார்.

தொடர்ந்து பக்தர்களுக்கு சேவை சாதித்துவந்த நம்பெருமாள், மீண்டும், நேற்று இரவு, 12:00 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, நள்ளிரவு, 1:15 மணிக்கு மூலஸ் தானத்தை சென்றடைந்தார்.


பகல் பத்து உற்சவம் நிறைவுபெற்று, ராப்பத்து உற்சவம் துவங்கியதை அடுத்து, வரும், 26ம் தேதிவரை மதியம், 1:00 முதல், இரவு, 8:00 மணி வரையும், 27ம் தேதி மாலை, 4:15 முதல், இரவு, 8:00 மணிவரை பரமபத வாசல் திறந்து இருக்கும்.டிசம்பர், 28ம் தேதி ராப்பத்து எட்டாம் நாள் அன்று பரமபதவாசல் திறக்கப்படாது. டிசம்பர், 29ம் தேதி மதியம், 1:00 முதல், இரவு, 8:00 மணி வரையும், 30ம் தேதி காலை, 10:00 முதல், இரவு, 8:00 மணிவரையும் பரமபத வாசல் திறந்திருக்கும்.இந்த நாட்களில், பக்தர்கள் பரமபத வாசலை கடந்துசெல்லலாம்.

வரும், 31ம் தேதி நம்மாழ் வாருக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் ஜனவரி, 1ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...