பக்தர்களின் கோவிந்தா… கோவிந்தா கோஷம் முழங்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டது

பக்தர்களின் கோவிந்தா… கோவிந்தா கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோவில் சொர்க்கவாசல் நேற்று அதிகாலை திறக்கப்பட்டது.பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் முதலாவதாக உள்ளது. ஆண்டு தோறும், ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். நேற்று அதி காலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக அதிகாலை, 3:45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ் தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்ளிட்ட பல்வேறு திருவா பரணங்களை அணிந்து புறப்பட்டார்.ராஜ மகேந்திரன் சுற்று வலம்வந்து, நாழிக் கேட்டான் வாசல் வழியாக, குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்கக்கொடி மரத்தை சுற்றி, துறை பிரகாரம் வழியாக அதிகாலை, 4:30 மணிக்கு சொர்க்கவாசல் பகுதியை அடைந்தார்.பட்டர்களின் வேதபாராயணங்களை கேட்டருளிய நம்பெருமாள், அதிகாலை, 5:00 மணிக்கு பரமபத வாசல் என்னும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும், கடந்துசென்றார். நம்பெருமாளின் வருகைக்காக காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், 'கோவிந்தா… கோவிந்தா' என, கோஷம் எழுப்பியபடி சொர்க்க வாசலை கடந்து சென்றனர்.


சொர்க்கவாசலில் இருந்து வெளியேறிய நம்பெருமாள், ஆயிரங்கால் மண்டபம் முன் அமைத்திருந்த திருக்கொட்டகைக்கு, அதிகாலை, 5:15 மணிக்கு வந்துசேர்ந்தார்.

தொடர்ந்து பக்தர்களுக்கு சேவை சாதித்துவந்த நம்பெருமாள், மீண்டும், நேற்று இரவு, 12:00 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, நள்ளிரவு, 1:15 மணிக்கு மூலஸ் தானத்தை சென்றடைந்தார்.


பகல் பத்து உற்சவம் நிறைவுபெற்று, ராப்பத்து உற்சவம் துவங்கியதை அடுத்து, வரும், 26ம் தேதிவரை மதியம், 1:00 முதல், இரவு, 8:00 மணி வரையும், 27ம் தேதி மாலை, 4:15 முதல், இரவு, 8:00 மணிவரை பரமபத வாசல் திறந்து இருக்கும்.டிசம்பர், 28ம் தேதி ராப்பத்து எட்டாம் நாள் அன்று பரமபதவாசல் திறக்கப்படாது. டிசம்பர், 29ம் தேதி மதியம், 1:00 முதல், இரவு, 8:00 மணி வரையும், 30ம் தேதி காலை, 10:00 முதல், இரவு, 8:00 மணிவரையும் பரமபத வாசல் திறந்திருக்கும்.இந்த நாட்களில், பக்தர்கள் பரமபத வாசலை கடந்துசெல்லலாம்.

வரும், 31ம் தேதி நம்மாழ் வாருக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் ஜனவரி, 1ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...