ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்தியாவில் புல்லட் ரயில்

இந்தியா – ஜப்பான் உறவை வலுப்படுத்தும் விதத்தில் 3 நாள் அரசுமுறைப் பயணமாக,  டிசம்பர் 11 அன்று ஜப்பான் பிரதமர் ஷிஜோ அபே புது டெல்லி வந்து சேர்ந்தார். டிசம்பர் 12 அன்று, இந்தியா – ஜப்பான் தொழில் வர்த்தக மாநாட்டில் பேசுகையில் மோடியின் அரசு கொள்கை முடிவெடுக்கும் வேகம் தனது நாட்டின் புல்லட் ரயிலின் வேகத்தை விட அதிகம் என்று புகழாரம் சூட்டினார்.  இம்மாநாட்டில் பேசிய மோடி, நமது நாட்டின் வளர்ச்சியின் வேகமும் ஜப்பான் நாட்டின் புல்லட் ரயிலுக்கு இணையான வேகத்தில் செல்லவேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். 

இந்தியாவில் முதல்முறையாக புல்லட் ரயில் இயக்க ஜப்பான் நாடு உதவி செய முன்வந்துள்ளது.  இந்த ரயில், மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது.  தற்போது அதிகபட்சமாக ராஜ்தானி எக்ஸ்பிரஸ் வேகம் 140 கி.மீ என டெல்லி ஆக்ரா இடையில் இயக்கப்படவிருக்கும் ‘கதிமான்’ எக்ஸ்பிரஸ் 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது; இந்த ரயிலே தற்போதைக்கு மிக விரைவு ரயில்.  புதிதாக செயல்படுத்தப்படவிருக்கும் புல்லட் ரயில் திட்டத்தின் திட்ட மதிப்பு 15 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 98000 கோடி ரூபா). மும்பை – ஆமதாபாத் இடையில் 505 கி.மீ. தூரத்திற்கு இதற்காக விசேஷ ரயில்பாதை அமைக்கப்படும்.  இவ்விரு நகரங்களுக்கிடையிலான இந்த தூரத்தை இந்த ரயில் இரண்டு மணி நேரத்தில் கடந்து செல்லும்.  இவ்வழிப்பாதை  மொத்தம் 11 குகைப் பாதைகளைத் (tunnel) தாண்டியும், மும்பையில் கடலுக்குக் கீழாகவும்  அமைக்கப்படவிருக்கின்றது.  இத்திட்டத்தை நிறைவேற்ற நிதியுதவி செவது மட்டுமல்லாமல், அனைத்து தொழில்நுட்ப உதவிகளும் ஜப்பான் வழங்கவிருக்கின்றது.  பிரத்தியேகமாக உருவாக்கப்படவிருக்கும் இந்த ரயில் பாதையில், ரயில் என்ஜின், ரயில் பெட்டிகள் அனைத்தும் ஜப்பானில் வெற்றிகரமாக இயக்கப்படும் ஷிங்கன்சென் புல்லட் ரயில் நிறுவனமே வழங்கும்.  கடந்த 1964ஆம் வருடம் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புல்லட் ரயிலில் இது வரை 560 கோடி மக்கள் பயணம் செதுள்ளனர்.  ஒரு முறை கூட விபத்தை சந்திக்காத இந்த புல்லட் ரயில் ஒரு முறை கூட கால தாமதம் ஆனதாக வரலாறே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்ட பிரதமர் அபே, சனிக்கிழமை மாலை வாரணாசி சென்றார்.  அங்கு பிரத்தியேகமாக ஏற்பாடு செயப்பட்டிருந்த கங்கை ஆரத்தியிலும் கலந்து கொண்டு, கங்கை நதிக்கு தனது நமஸ்காரங்களை தெரிவித்துக்கொண்டார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...