இந்த அரசு உணர்ச்சிகலுக்கு ஆட்பட்டது அல்ல அர்ப்பணிப்புகளுக்கு மதிப்பளிக்க கூடியது

உலகிலேயே மிக உயரமான போர்க்களம் என்று வர்ணிக்கப்படும் காஷ்மீரின்  சியாச்சின் மலைப் பிரதேசத்தில் (19 ஆயிரத்து 600 அடி உயரத்தில்) இந்திய பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க இந்திய ராணுவத்தினர் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.

இங்கு தேசத்தை காப்பதற்காக -45 டிகிரி செல்சியஸ்ஸில் கடும் பணிப்போளிவையும் தாங்கிக்கொண்டு இந்திய ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 3-ந் தேதி அந்த ராணுவ முகாமின் ஒரு பகுதியில் திடீர் பனிச் சரிவு ஏற்பட்டது. அதில்  தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உள்பட 10 ராணுவ வீரர்கள் சிக்கி பனி மலைக்குள் சுமார் 25 அடி ஆழத்தில் புதைந்தனர்.

இதையடுத்து பனிக்கட்டிகளை அகற்றி 10 ராணுவ வீரர்களையும் மீட்கும் பணி தீவிரம் அடைந்தது . அதில்  5 ராணுவ வீரர்கள்  உயிரிழந்த நிலையில் ஹனுமந்தப்பா என்ற ஒரு ராணுவ வீரர் மட்டும் உயிருக்கு போராடி கொண்டிருந்தது கண்டுபிடிப்பபட்டது , உடனடியாக  மீட்புக் குழுவினர் அவரை பத்திரமாக மீட்டு.அந்த  இடத்திலேயே அவருக்கு முதல்  உதவி சிகிச்சை அளித்து பிறகு மேல் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி சிறப்பு  ஆராய்ச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

 

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனைக்கே நேரில் சென்று ஹனுமந்தப்பாவின் உடல் நிலை குறித்து நேரில் ஆய்வு செய்ததன் மூலம் கடும் பனியிலும், மழையிலும், பாலைவனத்திலும்  போராடி தேசத்தை காக்கும் நம் இராணுவ வீரர்களின் தியாகங்களுக்கு  மதிப்பளித்துள்ளார்.

 

தமது அரசு வாக்கு வங்கியை அடிப்படையாக கொண்டது அல்ல, தேசத்தின் உண்மை ஆரோக்கியத்தை அடிப்படையாக கொண்டது. உணர்ச்சிகலுக்கு ஆட்பட்டது அல்ல (ரோஹித் வேமூலா தற்கொலை, தாந்திரி சம்பவம்), உண்மை அர்ப்பணிப்புகளுக்கு மதிப்பளிக்க கூடியது என்று பிரதமர் தனது செயல்பாட்டின் மூலம் நிருபித்துள்ளார்.

 

எனவேதான் 1984-க்கு பிறகு இதுவரை 800-க்கும் அதிகமான இராணுவ வீரர்கள் பனிமலை சீற்றத்தினால் மட்டுமே பலியான போதிலும் ஏற்ப்படாத தேசிய உணர்வும், எழுதப்படாத செய்தி கட்டுரைகளும், பத்திரிக்கைகளின் முக்கியத்துவமும்   இந்த பத்து ராணுவ வீரர்களின் தியாகங்களுக்கு கிட்டியுள்ளது.    

தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...