மார்க்சிஸ்ட்களின் வன்முறை அரசியலுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்

மார்க்சிஸ்ட் கட்சியின் வன்முறை அரசியலுக்கு, வாக்குகளின்  மூலம் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா திருவனந்தபுரத்தில் கூறினார்.

கடந்த சிலதினங்களுக்கு முன் திருவனந்தபுரம் காட்டாயிகோணம் பகுதியில் பாஜ மற்றும் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் இடையே பயங்கரமோதல் ஏற்பட்டது. இதில் பாஜ மாநில தலைவர் முரளீதரன் உள்பட 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்தமோதலில் அமல் கிருஷ்ணா என்ற ஆர்எஸ்எஸ் தொண்டர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் ஆபத்தான நிலையில் திருவனந்த புரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமல்கிருஷ்ணாவை சந்தித்து உடல் நலம் விசாரிப்பதற்கு பாஜ தேசிய தலைவர் அமித்ஷா நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தனிவிமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார்.

பின்னர் அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்று அமல் கிருஷ்ணாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் அமித்ஷா நிருபர்களிடம் கூறியதாவது: கேரளாவிலும், மேற்குவங்காளத்திலும் மார்க்சிஸ்ட் கட்சியினர் வன்முறை அரசியலை தூண்டிவிடுகின்றனர். பல ஆண்டுகளாக கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பாஜக தொண்டர்களை குறி வைத்து தாக்குதல் நடத்துகின்றனர். அவர்கள் எத்தனை பாஜக தொண்டர்களை அழித்தாலும் பாஜ மேலும் மேலும் வளரும். உலகம் முழுவதும் கம்யூனிசம் அழிந்துவருகிறது. இந்தியாவிலும் இக்கட்சிக்கு அழிவுகாலம் தொடங்கி விட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் வன்முறை அரசியலுக்கு வாக்குகள் மூலம் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...