வெளி நாடுகளில் பணம் பதுக்கியவர்கள் நிம்மதியாக தூங்கமுடியாது

பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் வெளி நாடுகளில் பணம் பதுக்கியவர்கள் நிம்மதியாக தூங்கமுடியாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தொலைக்காட்சி சேனலுக்கு அளித்தபேட்டியில் கூறியுள்ளார்.
 
உலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரைநட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில்வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படியெல்லாம்  ஏய்ப்பு செய்துள் ளார்கள் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. இதுதான் "பனாமா பேப்பர்ஸ்".
 
தற்போது இந்தவிவகாரம் இந்தியாவில் அடுத்த சர்ச்சையாகக் கிளம்பியுள்ளது. இதில் இந்தியர்கள் 500 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தவிவகாரம் குறித்து பேசிய ஜேட்லி, இந்த பிரபலங்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பணம் பதுக்கியுள்ளது குறித்து முழுமையாக விசாரிக்கப்படும்.
 
அதுவரை அவர்கள் நிம்மதியாக தூங்கமுடியாது என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக பனாமா பேப்பரை முன் வைத்து வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் பிரபலங்கள் பணம் பதுக்கியுள்ளனர் என்பது குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்தவிவகாரம் குறித்து விசாரணை நடத்த பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாகவும் ஜேட்லி கூறினார். குற்றம் சாட்டப்பட் டுள்ளவர்களில் சட்ட ரீதியான கணக்குகள் எது, சட்டத்துக்குப் புறம்பான கணக்குகள் எது என விசாரணை நடத்தப்படும். சட்டவிரோதமாக பணத்தை பதுக்கி உள்ளனர் என்று தெரிந்தால் முழுவதுமாக அரசு கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தவிவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து அனைத்தும் சரிசெய்யப்படும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...