திறப்பு விழாக்களில் கலந்து கொள்ள சம்பளம் தரவேண்டும் அந்த பணம் மக்களின் நல்ல காரியங்களுக்கு செலவு செய்வேன் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

என்னைப்போன்ற சக நடிகர்கள் திறப்புவிழாவுக்குச் செல்லும்போது எவ்வளவு தொகை வாங்குகிறார்களோ அதுபோன்ற தொகை வாங்கிவிட்டுதான் நான் திறப்புவிழாவுக்கு போவேன்’ என்றார் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி.

கேரள மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் வெற்றி பெற்ற முதல் எம்.பி என்ற பெருமைக்கு சொந்தக்காரர் நடிகர் சுரேஷ் கோபி. அவருக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சுரேஷ் கோபி இணை அமைச்சராக பதவி ஏற்றபிறகு துறை ஒதுக்கப்படுவதற்கு முன், ‘நான் சினிமாவில் நடிக்க வேண்டும். எனக்கு அமைச்சர் பதவி தேவையில்லை’ எனக்கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார். அப்போது அவரை பா.ஜ.க மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை மூலம் சமாதானப்படுத்திய நிகழ்வுகளும் அரங்கேறின.

மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் சுரேஷ் கோபி கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் குருவாயூர் மண்டல கமிட்டி சார்பில் அமைச்சர் சுரேஷ் கோபிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் கோபி, “இனி இரண்டு ஆண்டுகள் நாம் தேர்தல் பிரசாரம்தான் செய்ய வேண்டும். 2025 அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தல் செமி ஃபைனலாகும். நல்லகாரியங்கள் இன்னும் நிறைய நடக்கும்.

நான் சினிமாவிலும் தொடர்ந்து நடிப்பேன். சுரண்டி பிழைக்க நான் அரசியலுக்கு வரவில்லை. சினிமாவில் இருந்து எனக்கு கிடைக்கும் சம்பளத்தில் 5 முதல் 8 சதவிகிதம் தொகையை நான் நல்லகாரியங்களுக்கு செலவு செய்கிறேன். அதற்கான உரிமை எனக்கு உண்டு. அப்படி வரும் பணத்தை நான் தனிநபர்களுக்கு கொடுக்கமாட்டேன். மக்களுக்கு பயன்படும் வகையில் செலவு செய்வேன். அதற்காக வேறு யாரிடமும் பணம் வசூலிக்கமாட்டேன். ஒருவகையில் மட்டும் பணம் வசூல் நடத்தப்படும். தனியார் திறப்பு விழாக்களுக்கு எம்.பி-யை வைத்து திறக்கலாம் என நினைக்க வேண்டாம். திறப்பு விழாவுக்கு சினிமா நடிகராகத்தான் வருவேன். அதற்கு ஏற்ற சம்பளம்  வாங்கிவிட்டுதான் வருவேன். என்னைப்போன்ற சக நடிகர்கள் திறப்புவிழாவுக்குச் செல்லும்போது எவ்வளவு தொகை வாங்குகிறார்களோ அதுபோன்ற தொகை வாங்கிவிட்டுதான் நான் திறப்பு விழாவுக்கு போவேன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஹரியானா தேர்தலில் மக்களுக்கு ப ...

ஹரியானா தேர்தலில் மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் ஹரியானா தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள், இளைஞர்கள் அதிகம் பேர் ...

மஹாராஷ்டிராவில் ரூ 50,000 கோடி திட் ...

மஹாராஷ்டிராவில் ரூ 50,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் மஹாராஷ்டிராவின் வாஷிம், மும்பை மற்றும் தானேயில் ரூ.50 ஆயிரம் ...

3-வது கௌடில்யா மாநாட்டில் பிரதம ...

3-வது கௌடில்யா மாநாட்டில் பிரதமர் மோடி ஆற்றிய உரை புதுதில்லியில் இன்று (04.10.2024) நடைபெற்ற கௌடில்யா பொருளாதார மாநாட்டில் ...

இளைஞர்களை இருண்ட உலகத்திற்கு க ...

இளைஞர்களை இருண்ட உலகத்திற்கு காங்கிரஸ் அழைக்கிறது -அமித்ஷா குற்றம் சாடியுள்ளார் இளைஞர்களை போதைப்பொருட்களின் இருண்ட உலகத்திற்கு காங்கிரஸ் அழைத்து செல்ல ...

சாலைகளை தூய்மையாக வைத்திருக்க ...

சாலைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் -நிதின் கட்கரி “யாராவது பான் மசாலா சாப்பிட்டுவிட்டு சாலையில் துப்புவதை பார்த்தால், ...

மேற்காசியா போர் பதற்றம் அதிகரி ...

மேற்காசியா போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை மேற்காசியா போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இன்று பாதுகாப்பு ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...