திறப்பு விழாக்களில் கலந்து கொள்ள சம்பளம் தரவேண்டும் அந்த பணம் மக்களின் நல்ல காரியங்களுக்கு செலவு செய்வேன் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

என்னைப்போன்ற சக நடிகர்கள் திறப்புவிழாவுக்குச் செல்லும்போது எவ்வளவு தொகை வாங்குகிறார்களோ அதுபோன்ற தொகை வாங்கிவிட்டுதான் நான் திறப்புவிழாவுக்கு போவேன்’ என்றார் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி.

கேரள மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் வெற்றி பெற்ற முதல் எம்.பி என்ற பெருமைக்கு சொந்தக்காரர் நடிகர் சுரேஷ் கோபி. அவருக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சுரேஷ் கோபி இணை அமைச்சராக பதவி ஏற்றபிறகு துறை ஒதுக்கப்படுவதற்கு முன், ‘நான் சினிமாவில் நடிக்க வேண்டும். எனக்கு அமைச்சர் பதவி தேவையில்லை’ எனக்கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார். அப்போது அவரை பா.ஜ.க மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை மூலம் சமாதானப்படுத்திய நிகழ்வுகளும் அரங்கேறின.

மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் சுரேஷ் கோபி கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் குருவாயூர் மண்டல கமிட்டி சார்பில் அமைச்சர் சுரேஷ் கோபிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் கோபி, “இனி இரண்டு ஆண்டுகள் நாம் தேர்தல் பிரசாரம்தான் செய்ய வேண்டும். 2025 அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தல் செமி ஃபைனலாகும். நல்லகாரியங்கள் இன்னும் நிறைய நடக்கும்.

நான் சினிமாவிலும் தொடர்ந்து நடிப்பேன். சுரண்டி பிழைக்க நான் அரசியலுக்கு வரவில்லை. சினிமாவில் இருந்து எனக்கு கிடைக்கும் சம்பளத்தில் 5 முதல் 8 சதவிகிதம் தொகையை நான் நல்லகாரியங்களுக்கு செலவு செய்கிறேன். அதற்கான உரிமை எனக்கு உண்டு. அப்படி வரும் பணத்தை நான் தனிநபர்களுக்கு கொடுக்கமாட்டேன். மக்களுக்கு பயன்படும் வகையில் செலவு செய்வேன். அதற்காக வேறு யாரிடமும் பணம் வசூலிக்கமாட்டேன். ஒருவகையில் மட்டும் பணம் வசூல் நடத்தப்படும். தனியார் திறப்பு விழாக்களுக்கு எம்.பி-யை வைத்து திறக்கலாம் என நினைக்க வேண்டாம். திறப்பு விழாவுக்கு சினிமா நடிகராகத்தான் வருவேன். அதற்கு ஏற்ற சம்பளம்  வாங்கிவிட்டுதான் வருவேன். என்னைப்போன்ற சக நடிகர்கள் திறப்புவிழாவுக்குச் செல்லும்போது எவ்வளவு தொகை வாங்குகிறார்களோ அதுபோன்ற தொகை வாங்கிவிட்டுதான் நான் திறப்பு விழாவுக்கு போவேன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உ ...

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி! பஹல்காமில் தாக்குதல் நடந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ தளபதி ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீட ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி காஷ்மீர் எல்லைக் கோட்டுப்பகுதியில் ஒரு சில இடங்களில், ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவா ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவாத தீ.. தண்ணீரால் பதிலடி தந்தது இந்தியா பூமியில் ஒரு சொர்க்கம் இருந்தால், அது இது தான்... ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்ற ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்றுமை குரல் : பயங்கரவாதத்தை ஒடுக்க சூளுரை பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக டில்லியில் நேற்று நடந்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிற ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிறோம் – இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் உறுதி ''இந்த துயரமான நேரத்தில் பிரான்ஸ், இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...