உள்க்கட்டமைப்பு துறையில் ரூ. 25 லட்சம்கோடி முதலீடு 4 கோடி பேருக்கு வேலை

அடுத்த 3 ஆண்டுகளில் உள்க்கட்டமைப்பு துறையில் ரூ. 25 லட்சம்கோடி முதலீடு செய்யப்படும். இதன் வாயிலாக 4 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்குவந்த 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதன் சாதனைகள் மற்றும் எதிர் கால திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் கட்கரி பிடிஐக்கு அளித்த பேட்டி: உள்கட்டமைப்பு துறையில் கடந்த இரண்டுஆண்டுகளில் ரூ. இரண்டரை லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்ததுறையில் முதலீடு குறைந்ததற்கு முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறுகளே காரணம்.

பல்வேறு தடைகள் காரணமாக பலதிட்டங்கள் பாதியிலேயே நின்றுவிட்டன. ஏறத்தாழ 403 திட்டங்கள் முடக்கப் பட்டடிருந்தன. அவற்றில் பெரும்பாலான திட்டங்களுக்கு தற்போது அனுமதிகிடைத்துள்ளது. ரூ. 4 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. அடுத்த மூன்றுஆண்டுகளில் இந்த துறையில் ரூ. 25 லட்சம் கோடி முதலீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 4 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நாட்டின் உற்பத்தி 3 சதவீதம் அளவுக்கு உயரும். நெடுஞ்சாலைதுறை தொடர்பாக 21 முக்கிய கொள்கை முடிவுகளுக்கு மத்தியமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2017ம் ஆண்டில்மட்டும் ரூ. 5 லட்சம் கோடி இந்ததுறையில் முதலீடு செய்யப்படும். துறைமுகங்கள் மேம்பாட்டுக்காக ரூ. 50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. உலக தரம்வாய்ந்த உள்கட்டமைப்புகளை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்ற கனவு உள்ளது. பணம் இதற்கு தடையாக இல்லை. சாகர்மாலா திட்டத்துக்காக மட்டும் ரூ. 12 லட்சம்கோடி செலவிடப்பட உள்ளது. இவ்வாறு கட்கரி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...