8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

2024 மார்ச் வரை உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம்  14 துறைகளில்  755 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு  ரூ.1.23 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த  அமைச்சர், இதன் மூலம் 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

செல்பேசி தயாரிப்பு, மருந்துப் பொருட்கள் உற்பத்தி, மருத்துவ சாதனங்கள் உற்பத்தி, மோட்டார் வாகனங்கள், உதிரிபாகங்கள் உற்பத்தி,  தொலைதொடர்பு சாதனங்கள், குளிர்சாதன பெட்டிகள், எல்இடி பல்புகள், உணவுப்பொருட்கள், ஜவுளி, சூரிய மின்சக்திக்கான தகடுகள், வேதியியல் மின்கலங்கள், ட்ரோன்கள் போன்ற துறைகளில் இந்த முதலீடு ஈர்க்கப்பட்டு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

முக்கியத் துறைகளிலும், அதிநவீன தொழில்நுட்பத்திலும் முதலீடுகளை ஈர்ப்பது, உற்பத்தித் துறையில் செயல் திறனை உறுதி செய்து பொருளாதாரத்தை மேம்படுத்துவது, இந்திய நிறுவனங்களையும், உற்பத்தியாளர்களையும் உலக அளவில் போட்டியிட செய்வது போன்றவை உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் நோக்கங்களாகும் என்று அமைச்சர்  தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுப் பொருட்கள் ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கனடா, பிரான்ஸ், ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...