பாஜகவின் இரண்டாண்டு கால ஆட்சி சுதந்திர இந்தியாவின் சிறந்த ஆட்சியாக அமைந்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.
மத்திய பாஜக அரசின் இரண்டாண்டுகால ஆட்சியின் சாதனை விளக்கக்கூட்டம் மதுரை மாநகர் மாவட்ட பாஜக சார்பில் தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்க அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமைவகித்தார். இதில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது:
பாஜகவின் இரண்டாண்டுகால ஆட்சியை சுதந்திர இந்தியாவின் சிறந்த ஆட்சி காலமாக மக்கள் கருதுகின்றனர். மக்களுக்காகமட்டுமே யோசிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களால் இவை சாத்தியமாகி உள்ளது. நரிக் குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தது பாஜக அரசின் சமீபத்திய சாதனைகளில் மிகவும் முக்கியமானது. சுதந்திரம்கிடைத்து இத்தனை ஆண்டுகளில் ஒருசமுகம் அங்கீகாரத்துக்காக அலைந்தது மிகவும் கொடுமையான ஒன்று. அதை உணர்ந்த பிரதமர் நரேந்திரமோடி எந்தக் கட்சியும் செய்யத் துணியாத சாதனையை செய்துள்ளார் என்றார்.
ஒருதரமான தேநீரின் விலை பத்து ரூபாய். ஆனால், பிரதமரின் காப்பீடுதிட்டத்துக்கு மாதம் 1 ரூபாய் செலவழித்தால் போதும். இது போன்ற மத்திய அரசின் தரமான திட்டங்கள் அனைத்தும் மாநில மக்களுக்கு தெரியாமல் உள்ளது. இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது பாஜக உறுப்பினர்களின் கடமை என்றார்.
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
Leave a Reply
You must be logged in to post a comment.