வேலை யின்மை பிரச்னையை முழுமையாக ஒழிக்க பாடுபடுகிறோம்

வேலை யின்மை பிரச்னையை முழுமையாக ஒழிக்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு பாடுபட்டுவருகிறது என்று பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலம், புணேவில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற "பிரமோத் மகாஜன் திறன் வளர்ப்பு, தொழில் முனைவுத் திட்டம்' தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற அவர் பேசியதாவது:

இப்போது இந்தியா இளைஞர்கள் அதிகமுள்ள நாடாகஉள்ளது நமது அதிர்ஷ்டம். கடந்த ஆட்சியில் கடைப் பிடிக்கப்பட்ட தவறான கொள்கைகளால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. ஆனால் இப்போது ஆட்சியில் உள்ள பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் பல்வேறு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுத்துள்ளது. திறன்மிகு இந்தியா, முத்ராவங்கி, "ஸ்டார்ட் அப் இந்தியா', "ஸ்டாண்ட் அப் இந்தியா' ஆகியதிட்டங்கள் மூலம் நாட்டில் வேலை யின்மை பிரச்னையை முழுமையாக ஒழிக்கப்பாடுபட்டு வருகிறது.

நமது நாட்டில் வேளாண்மை முக்கியத்தொழிலாக உள்ளது. நாட்டின் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தையே சார்ந்துள்ளனர். எனினும் இந்தத்தொழில் லாபகரமானதாக இல்லை. எனவே, மக்கள் விவசாயத்தைமட்டுமே அதிகம் சார்ந்திருக்காமல், பிற தொழில்களிலும் ஈடுபடும்நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறைவாகவே இருந்தது. ஆனால் இப்போது ஜி.டி.பி அதிகரித்துள்ளது.

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஏழைமக்களுக்காக 1 கோடி பேர் தங்கள் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர். நமது நாடு இப்போது பாதுகாப்பான கரங்களில் உள்ளது. சர்வதேசளவில் மிகவேகமாக வளரும்பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றார் அமித்ஷா.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக ஆட்சியின் முதலாமாண்டு விழ� ...

பாஜக ஆட்சியின் முதலாமாண்டு விழா: ஜூன் 20ல் ஒடிசா செல்கிறார் பிரதமர் பாஜக அரசின் முதலாமாண்டு விழாவிற்கான மாபெரும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ...

பூகம்பத்தையும் தாங்கும் ‘இன்ஜ� ...

பூகம்பத்தையும் தாங்கும் ‘இன்ஜினீயரிங் அதிசயம்’ – பிரதமர் மோடி திறந்து வைத்த செனாப் பாலத்தின் சிறப்புகள் ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டு உள்ள உலகின் மிக உயரமான ...

மனிதகுலத்தின் எதிரி பாகிஸ்தான� ...

மனிதகுலத்தின் எதிரி பாகிஸ்தான் ‘மனிதகுலத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் எதிரி பாகிஸ்தான்; இந்தியாவில் வகுப்புவாத கலவரங்களைத் ...

பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சம� ...

பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ''பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்'' என ...

விவசாயிகளுக்கு சேவை செய்வது பா� ...

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம் ''கடினமாக உழைக்கும் விவசாயிகளுக்கு சேவை செய்வது எனக்கு கிடைத்த ...

‘ஆப்பரேஷன் சிந்துார்’ பெயரை ...

‘ஆப்பரேஷன் சிந்துார்’ பெயரை கேட்டாலே பாக்., அலறும் ''நாட்டில் வகுப்புவாத கலவரங்களை துாண்டிவிட்டு, சுற்றுலாவை சார்ந்திருக்கும் ஏழை ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...