வேலை யின்மை பிரச்னையை முழுமையாக ஒழிக்க பாடுபடுகிறோம்

வேலை யின்மை பிரச்னையை முழுமையாக ஒழிக்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு பாடுபட்டுவருகிறது என்று பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலம், புணேவில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற "பிரமோத் மகாஜன் திறன் வளர்ப்பு, தொழில் முனைவுத் திட்டம்' தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற அவர் பேசியதாவது:

இப்போது இந்தியா இளைஞர்கள் அதிகமுள்ள நாடாகஉள்ளது நமது அதிர்ஷ்டம். கடந்த ஆட்சியில் கடைப் பிடிக்கப்பட்ட தவறான கொள்கைகளால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. ஆனால் இப்போது ஆட்சியில் உள்ள பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் பல்வேறு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுத்துள்ளது. திறன்மிகு இந்தியா, முத்ராவங்கி, "ஸ்டார்ட் அப் இந்தியா', "ஸ்டாண்ட் அப் இந்தியா' ஆகியதிட்டங்கள் மூலம் நாட்டில் வேலை யின்மை பிரச்னையை முழுமையாக ஒழிக்கப்பாடுபட்டு வருகிறது.

நமது நாட்டில் வேளாண்மை முக்கியத்தொழிலாக உள்ளது. நாட்டின் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தையே சார்ந்துள்ளனர். எனினும் இந்தத்தொழில் லாபகரமானதாக இல்லை. எனவே, மக்கள் விவசாயத்தைமட்டுமே அதிகம் சார்ந்திருக்காமல், பிற தொழில்களிலும் ஈடுபடும்நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறைவாகவே இருந்தது. ஆனால் இப்போது ஜி.டி.பி அதிகரித்துள்ளது.

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஏழைமக்களுக்காக 1 கோடி பேர் தங்கள் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர். நமது நாடு இப்போது பாதுகாப்பான கரங்களில் உள்ளது. சர்வதேசளவில் மிகவேகமாக வளரும்பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றார் அமித்ஷா.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...