மோடியின் தலைமையில் பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்கிறது

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பொருளா தாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்துவருவதாக பாஜக பெருமிதம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அலகா பாத்தில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. நிறைவுநாளான நேற்று பல்வேறு விவகாரங்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

தொடர்ந்து இருஆண்டுகளாக வறட்சி நிலவியபோதிலும், சர்வ தேசஅளவில் மந்தநிலை ஏற் பட்டபோதிலும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பொருளா தாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா மிளிர்ந்து வருகிறது. முதலீடு களுக்கான ஆதார தடைகள் குறுக்கிட்ட போதிலும் நிதிபற்றாக்குறை 3.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 2015-ல் இந்தியாவில் நேரடி அன்னியமுதலீடுகள் குவிந்துள்ளன.

உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான முதலீடுகளை அதிகரித்தது, வேளாண் மற்றும் சிறுதொழில் களுக்கான லாப கணக்கை உயர்த்தியது ஆகியவற்றால் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துள்ளது. இதன்காரணமாக கடைசி காலாண்டில் நமது மொத்த உள்நாட்டு உற்பத்திவளர்ச்சி (ஜிடிபி) 7.9 சதவீதத்தை எட்டியுள்ளது. இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியாகும். இதேபோல் 2015-16 காலக்கட்டத்தில் நுகர்வோர் செலவழிக்கும் தொகையும் 6.2 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாக அதிகரித் துள்ளது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...