சென்னையில் களைகட்டிய யோகாதினம் : தமிழிசை, மத்திய அமைச்சர் விகே. சிங் பங்கேற்பு

சர்வதேச யோகாதினத்தை முன்னிட்டு சென்னையில் இன்று நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று யோகாசெய்தனர். மேற்கு தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் 3 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரமாண்ட யோகாநிகழ்ச்சி நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சியில், மத்தியமைச்சர் விகே.சிங், பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் 1லட்சத்துக்கும் அதிகமான யோகா நிகழ்ச்சிகள் இன்று நடத்தப்பட்டன.
 
இதில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். தமிழகத்திலும் இன்று யோகா தின கொண்டாட்டங்கள் களைகட்டின. கல்லூரிகள், பள்ளிகள் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் யோகா நிகழ்ச்சி களுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கல்லூரி மாணவ, மாணவிகள், பள்ளி மாணவர்கள் அரசுஅலுவலர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் இதில் பங்கேற்று யோகா செய்தனர். மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து, ஆசிரி யர்களும் பெற்றோர்களும், குழந்தைகளுடன் இணைந்து யோகாபயிற்சியை யோகா செய்தனர். தமிழகத்தில் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் யோகா கொண்டா ட்டங்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டன.
 
சென்னை பெசன்ட்நகர் கடற்கரை அருகே நடைபெற்ற யோகா தினக் கொண்டா ட்டத்தில் மத்திய அமைச்சர் வி.கே.சிங், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன், நடிகர் ஓய்ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், பள்ளி, மாணவர்களும் திரளான அளவில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், யோகாவின் சிறப்பம்சங்கள் மற்றும் அவசியம் குறித்து மாணவர் களுக்கு எடுத்துரைக்கப் பட்டது.
 
சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற யோகாநிகழ்ச்சியில் 3000 பேர் பங்கேற்றனர். இதில் மத்திய இணையமைச்சர் விகே. சிங், மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், ஆகியோர் யோகாவின் சிறப்புகுறித்து வலியுறுத்தி பேசினர்.
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...