நாட்டை பிளவுபடுத்துவதற்காக துப்பாக்கியை கையில் ஏந்துபவர்கள் தீவிரவாதிகள் தான்

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான்வானியும், அவரது கூட்டாளிகளும் பாதுகாப்பு படையினரால் 8-ம் தேதி சுட்டுக் கொல்லப் பட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில், நீண்டமவுனத்திற்கு பின் அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி என்கவுண்டர் நடந்த இடத்தில் பர்கான்வானி இருந்தது பாதுகாப்பு படையினருக்கு தெரியாது என சர்ச்சைக்குரியவகையில் தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடியாக காஷ்மீர் பா.ஜ.க. தலைவர் சாத்சர்மா தெரிவித்தவை பின்வருமாறு:-

பயங்கரவாதி பர்கான்வானி கொல்லப்பட்டதை வெற்றியாகவே கருதுகிறோம். என்கவுண்டர் நடந்த இடத்தில் பர்கான் வானி பதுங்கி யிருந்தது பாதுகாப்பு படையினருக்கு ஏற்கனவேதெரியும். எவ்வித தகவலும் இல்லாமல் அவர்கள் அவ்வாறு செயல்படமாட்டார்கள். இந்த நாட்டை பிளவுபடுத்துவதற்காக துப்பாக்கியை கையில் ஏந்துபவர்கள் தீவிரவாதிகள் தான். அவர்கள் கொல்லப்படவேண்டும். இதன் அடிப்படையிலேயே பாதுகாப்புபடை வீரர்கள் செயல்பட்டுள்ளனர்.

இந்த நாட்டை பிளவுபடுத்த விரும்பிய ஒருதீவிரவாதியை அவர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். காஷ்மீர் பா.ஜ.க.வின் தலைவராக என்னை பொறுத்தவரையில் நான் கூற விரும்புவது என்னவென்றால், தலைக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்த ஒருதீவிரவாதியை என்கவுண்டரில் கொன்றது நமது பாதுகாப்பு படையினரின் வெற்றியாகும். இதில், தீவிரவாதி பதுங்கியிருந்தது பாதுகாப்பு படையினருக்கு முன் கூட்டியே தெரிந்திருந்ததா? தெரியாமல் இருந்ததா? என்று விவாதிப்பதே தேவையில்லாத ஒன்று இவ்வாறு காஷ்மீர் பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...