சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் மாவோயிஸ்டுகள் 30-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
2 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை மற்றும் மாவட்ட ரிசர்வ் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். பீஜப்பூர் மாவட்டத்தில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட இப்போது, கங்காளூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினர்.
இன்று காலை 7 மணிக்கு இந்த தாக்குதல் ஆரம்பமானது. தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் வெடிகுண்டுகள் வீசப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் மாவோயிஸ்டுகள் 26 பேர் பாதுகாப்பு படையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பாதுகாப்பு படையினர் தரப்பில் ஒருவர் உயிரிழந்தார்.
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |