சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் மாவோயிஸ்டுகள் 30-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
2 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை மற்றும் மாவட்ட ரிசர்வ் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். பீஜப்பூர் மாவட்டத்தில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட இப்போது, கங்காளூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினர்.
இன்று காலை 7 மணிக்கு இந்த தாக்குதல் ஆரம்பமானது. தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் வெடிகுண்டுகள் வீசப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் மாவோயிஸ்டுகள் 26 பேர் பாதுகாப்பு படையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பாதுகாப்பு படையினர் தரப்பில் ஒருவர் உயிரிழந்தார்.
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |