நதிநீர் இணைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும்

அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்புடன் நதி நீர் இணைப்புப்பணிகள் விரைவில்தொடங்கும் என மத்திய அமைச்சர் சதானந்தகவுடா தெரிவித்தார்.

விருதுநகர், சுலோக்சனா தெருவில் உள்ள காமராஜர் இல்லத்தில் அவரது உருவசிலைக்கு வியாழக்கிழமை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் சதானந்த கவுடா, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் மாநிலச் செயலர் சீனிவாசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் மத்திய அமைச்சர் சதானந்தகவுடா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடுமுழுவதும் சுதந்திரப் போராட்ட தியாகிகளை போற்றி நினைவுகூறும் வகையில் மூத்த தலைவர்கள் சுற்றுப் பயணம் செய்து வருகிறோம். அதன்படி, வியாழக்கிழமை காலை சிவகங்கை வேலு நாச்சியார் மணி மண்டபம், திருப்பத்தூர் மருது சகோதரர்கள் நினைவிடம் சென்று நான் பார்வையிட்டேன். அதேபோல், தற்போது காமராஜர் பிறந்தவீட்டுக்கு வந்திருப்பது எனக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. நாட்டில் நதி நீர் இணைப்பு முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் கொண்டுவரப்பட்டது. தற்போது குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் நதிநீர் இணைப்புக்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. மேலும், அனைத்து மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நதிநீர் இணைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...