நதிநீர் இணைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும்

அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்புடன் நதி நீர் இணைப்புப்பணிகள் விரைவில்தொடங்கும் என மத்திய அமைச்சர் சதானந்தகவுடா தெரிவித்தார்.

விருதுநகர், சுலோக்சனா தெருவில் உள்ள காமராஜர் இல்லத்தில் அவரது உருவசிலைக்கு வியாழக்கிழமை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் சதானந்த கவுடா, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் மாநிலச் செயலர் சீனிவாசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் மத்திய அமைச்சர் சதானந்தகவுடா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடுமுழுவதும் சுதந்திரப் போராட்ட தியாகிகளை போற்றி நினைவுகூறும் வகையில் மூத்த தலைவர்கள் சுற்றுப் பயணம் செய்து வருகிறோம். அதன்படி, வியாழக்கிழமை காலை சிவகங்கை வேலு நாச்சியார் மணி மண்டபம், திருப்பத்தூர் மருது சகோதரர்கள் நினைவிடம் சென்று நான் பார்வையிட்டேன். அதேபோல், தற்போது காமராஜர் பிறந்தவீட்டுக்கு வந்திருப்பது எனக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. நாட்டில் நதி நீர் இணைப்பு முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் கொண்டுவரப்பட்டது. தற்போது குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் நதிநீர் இணைப்புக்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. மேலும், அனைத்து மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நதிநீர் இணைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...