பலுசிஸ்தான் பற்றி பேசுவதற்கு இந்தியாவுக்கு முழு உரிமையுள்ளது

பலுசிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசிய மோடிக்கு ஆப்கான் அதிபர் ஹமீத்கர்சாய் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.  மேலும் பாகிஸ்தானின் அனைத்து அத்துமீறல்கள் பற்றி பேசுவதற்கு இந்தியாவுக்கு முழுஉரிமையுள்ளது எனவும் கூறியுள்ளார். 

முன்னதாக பிரதமர் நரேந்திரமோடி தனது சுதந்திர தின உரையில், பலுசிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் பாகிஸ்தானின் மனித உரிமைமீறல் குறித்து கேள்வி எழுப்பினார். பலுசிஸ்தான் மக்களுக்கு இந்தியா ஆதரவாக இருக்கும் என கருத்துதெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கான் அதிபர் ஹமீத்கர்சாய் கூறியபோது,  “பாகிஸ்தான் அதிகாரிகள் ஆப்கனை பற்றியும், இந்தியாவை பற்றியும் வெளிப்படையாக கருத்துதெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல் முறையாக இந்திய பிரதமர் மோடி பலுசிஸ்தான் பற்றி கருத்துதெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி பலுசிஸ்தான் விவகாரம்குறித்து பேசியதால்தான் அந்தமக்கள் மீது பாகிஸ்தான் செலுத்தும் அடக்கு முறைகள் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அளிக்கும் ராணுவ உதவிபற்றி அமெரிக்கா ஆதரவு அளித்தால் அதை வரவேற்கிறோம். ஆதரவு அளிக்க வில்லை என்றால் யாருடைய அனுமதிக்காகவும் இந்தியா காத்திருக்க தேவையில்லை. இந்திய தனது பிராந்திய நாடுகளில் அமைதி நிலவ வேண்டும் என்றே விரும்புகிறது” என்றார். மேலும் கடந்தகாலங்களில் அமெரிக்க பாகிஸ்தானுக்கு அளித்த ஆதரவைப் பற்றியும் குற்றச்சாட்டினார்.  முன்னதாக இந்தவாரம் இந்தியா வந்த வங்கதேச அமைச்சர் ஹசானுல் ஹயு இனுவும் பலுசிஸ்தான் குறித்த மோடியின் பேச்சுக்கு தனது ஆதரவை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...