பாகிஸ்தான் கூறுவதை கேட்க உலகம் தயாரில்லை

காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடுகிறவர் களுடன் சமசரம்கிடையாது காஷ்மீர் நிலவரம், கவலை அளிக்கக் கூடிய வகையில் உள்ளது. 1947–ம் ஆண்டு பிரிவினையை தொடர்ந்து, போர்கள் நடத்தி, வன்முறையை தூண்டிவிட்டு, காஷ்மீரை பறிக்கமுயன்று பாகிஸ்தான் தோல்வி கண்டது. இந்த நிலையில், அந்த நாடு இந்தியாவின் ஒருமைப்பாட்டின்மீது புதியவழியில் தாக்குதல் நடத்தி வருகிறது.

காஷ்மீரைப் பொறுத்தமட்டில் பிரதமர் நரேந்திரமோடி 3 முன்னுரிமைகளை கொண்டுள்ளார்.ஒன்று, நாட்டின் பாதுகாப்பிலும், ஒருமைப் பாட்டிலும் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. வன்முறையில் ஈடுபடுகிறவர்களுடன் சமரசம்கிடையாது.

இரண்டு, காஷ்மீர் வன்முறைகளையும், போர்களையும் சந்தித்துவந்துள்ளது. காஷ்மீருக்கு வளர்ச்சி தேவைப்படுகிறது. ஆனால் கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் தேசியமாநாட்டு கட்சி ஆட்சிகளில் அது மறுக்கப்பட்டுள்ளது.

மூன்று, ஜம்மு, பாரதீய ஜனதாவின் அடிப்படை ஆதரவுதளமாக அமைந்துள்ளதால், கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.

இப்போது நிலைமை மோசமாக உள்ளது. பாகிஸ்தான், பிரிவினை வாதிகள், மத அமைப்புகள் கை கோர்த்துள்ளன. புதியவழியில், இந்தியாவின் ஒருமைப்பாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.இது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

பிரிவினை வாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் காஷ்மீர்மக்கள், நாட்டுடன் ஒன்றுபட்டு நிற்கவேண்டும். அப்போதுதான் புதியவியூகத்தில் வந்துள்ள பாகிஸ்தானின் திட்டம், இந்த முறையும் தோற்கடிக்கப்படும்.

பாகிஸ்தான் 2 முறை போரில் தோற்கடிக்கப்பட்ட நிலையில், காஷ்மீரை போரின் மூலம் இந்தியாவிடம் இருந்து பறிக்க முடியாது என தெரிந்துகொண்டு, பயங்கரவாதிகளுக்கு பயிற்சிஅளித்து இந்தியாவினுள் திணிக்கத்தொடங்கியது. ஆனால் அவர்கள் கொல்லப்பட்ட பின்னர் புதியதிட்டத்தை கையில் எடுத்தது. 2008–ம் ஆண்டு ஜம்முவில் அமர்நாத் போராட்டம் தொடங்கியபோது, அவர்கள் கல்வீச்சை ஆரம்பித்தனர்.

பள்ளிக்கு செல்கிற குழந்தைகளுக்கு பைகளில் புத்தகங்களை தந்து அனுப்புவதற்கு பதிலாக, போலீசாரையும், பாதுகாப்பு படையினரையும் தாக்குவதற்காக கற்களைவைத்து அனுப்புகிறார்கள். ஆனால் பார்வைக்குறைபாடு உள்ளவர்களுக்கு, கைதாகிற கல்வீச்சாளர்கள் மட்டுமேதெரிகிறது. கல்வீச்சில் காயம் அடைந்து, ஆஸ்பத்திரிகளில் உள்ள ஆயிரக்கணக்கான போலீசாரையும், பாதுகாப்பு படையினரையும் தெரியவில்லை.

வரலாற்றை நீங்கள்பார்த்தால், பிரிவினைக்கு பின்னர் காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக பாகிஸ்தான் ஒருபோதும் அங்கீகரித்ததுஇல்லை என்பதை அறிவீர்கள். பிரிவினை நடந்தநாளிலேயே, இந்தியா நேர்மறை திட்டங்களை கையில் எடுத்தது. வறுமை ஒழிப்பு, மக்களின்வாழ்வாதார மேம்பாடு, கல்வியில் இந்தியா ஆர்வம் செலுத்தியது.

எத்தனையோ பிரச்சினைகள்வந்தன. நாம் அவற்றுக்கு எதிராக போராடினோம். அவற்றில் இருந்து வெளியேவந்தோம். இன்றைக்கு இந்தியா, உலகிலேயே பொருளாதார ரீதியில் வேகமாக வளர்ந்துவருகிற நாடாக உள்ளது. ஆனால் பாகிஸ்தான் அப்படி இல்லை. பாகிஸ்தானிடம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம்இல்லை. உண்மையான விஷயங்களில் இருந்து மக்களை திசைதிருப்பி காஷ்மீரிலும், இந்தியாவிலும் கோஷமழை பெய்ய செய்கிறது. போரில் தோல்விகள் கண்ட நிலையில், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது. ஆனால் பாகிஸ்தான் கூறுவதைகேட்க உலகம் தயாரில்லை இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி அருண் ஜெட்லி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...