காவிரி பிரச்சினை உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை தேவை

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடகம் தண்ணீர் தரமறுத்து அங்குள்ள பொது மக்களை போராட்டத்திற்கு தூண்டி விட்டுள்ளது. தண்ணீர் கிடைக்காதபோது அதற்கு அடுத்தபடியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தமிழக அரசு தெளிவாக திட்டமிட வேண்டும்.
 
அதற்கான அறிவிப்பையோ சர்வகட்சி கூட்டத்தையோ நடத்தியிருக்கவேண்டும். அல்லது விவசாய சங்கங்களை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி விவாதித் திருக்க வேண்டும். அனைத்துகட்சி கூட்டத்தை நடத்தினால் அதில் பா.ஜ.க பங்கேற்கும். தமிழக அரசு உரிமையை நிலை நாட்ட வேறு வழியின்றி நீதிமன்றத்தை நாடியது சரியானது.
 
ஒரு அரசாங்கமே நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படமாட்டேன் என சொல்லும்போது பொது மக்களிடம் சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்.
 
தமிழக அரசு தண்ணீர்போதாது என்றும், இன்னும் அதிகமாக வேண்டும் என கோரவேண்டும். கர்நாடகாவில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லாதது ஒரு அபாயகரமான சூழ்நிலையாகும். கர்நாடக முதல்மந்திரி சித்தராமையா போராட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...