உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன்

கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை அப்பகுதியில் உள்ள நானா, நானி என்ற முதியோர் இல்லத்தில் கண் கலங்கியபடி பெரியவர்களிடம் ஆசி பெற்றார்.

இதனையடுத்து அவர் பேசும் போது, “உங்களிடம் வாக்குசேகரிக்க நான் வரவில்லை. உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன். இங்குகாணப்படும் அன்பை போல நாங்கள் பிரச்சாரத்துக்கு செல்லும்வழியில் பெரியவர்கள் பலர் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கால் கடுக்க காத்திருந்து எனக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.

இவற்றை பார்க்கும் போது (கண்கலங்கியபடி) நம் நாட்டின் மீதும் நமது பிரதமர் மீதும் நீங்கள் எல்லாம்கொண்டுள்ள அன்பை வெளிக் காட்டுகிறது. எதிர்வரும் காலங்களில் இந்தியா மிகச்சிறந்த வளர்ச்சியை பெறும். நமது குழந்தைகளுக்கு வளமான இந்தியாவை வழங்க வேண்டியது நம் பொறுப்பு. நம் நாடு 450 ஆண்டுகளுக்குமுன் இருந்த வளமான இடத்திற்கு செல்லத் தான் போகிறது” என்றார்.

முன்னதாக, அந்த வளாகத்தில் ராமநவமியை முன்னிட்டு சிறப்புநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இல்லவாசிகள் அனைவரும் அண்ணாமலைக்கு ஆசிர்வாதம் வழங்கினர். மேடையில்இருந்த பெரியவர்களிடம் அண்ணாமலை காலில் விழுந்து ஆசி பெற்றார். அவருக்கு பெரியவர்கள் மலர்கள் தூவி, மந்திரங்கள் கூறி ஆசி வழங்கினர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...