தமிழக முதல்வரின் செயல் வடிவேலுவின் நகைச்சுவை போன்று உள்ளது

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு தமிழக மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மண்ணிப்பு கேட்கவேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், 142 அடியை எட்டுவதற்குமுன், அக்.29ம் தேதி கேரள அமைச்சர்கள் முன்னிலையில் அணை திறக்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக அரசுஅனுமதியின்றி, கேரள அரசு அணையை திறந்ததாக கூறப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் துரைமுருகன், தமிழக அரசு தான் அணையை திறந்தது என்றும், கேரள அமைச்சரும், அதிகாரிகளும் உடனிருந்தனர் என்றும் கூறினார்.

இதேபோல், பேபி அணையை வலுப்படுத்திய பின்னர் முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பேபி அணையை வலுப்படுத்துவதற்கு அதன் கீழ் உள்ள 15 மரங்களை வெட்டிஅகற்ற அனுமதிக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

இதனிடையே, அந்த 15 மரங்களை வெட்டுவதற்கு கேரளவனத்துறை அனுமதி வழங்கியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனதுஅறிக்கையில் தெரிவித்திருந்தார். கேரள அரசுக்கு நன்றி தெரிவித்தும் கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில் திடீர்திருப்பமாக பேபி அணைக்கு கீழ் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதி திரும்ப பெறப்படுவதாக கேரள வனத் துறை அமைச்சர் சசீந்திரன் தெரிவித்துள்ளார்.

மரங்களை வெட்ட தமிழகஅரசுக்கு அனுமதி வழங்கியதற்கு கேரளாவில் எதிர்ப்பு எழுந்ததால் அனுமதியை திரும்பபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக தேனியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறும்போது, முல்லைப் பெரியாறு அணையில்இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதற்கு தமிழக மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்புகேட்க வேண்டும்.

அணையில் 142அடிக்கு தண்ணீர் தேக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் வரையில் பாஜகவின் போராட்டம்தொடரும். இல்லையெனில் கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையை ஒரு லட்சம்பேருடன் சென்று தமிழக பாஜக முற்றுகையிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும், பேபி அணைக்கு கீழேஉள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை அனுமதி வழங்கியதாக நன்றி கடிதம்எழுதிய தமிழக முதல்வரின் செயல் வடிவேலுவின் நகைச்சுவை போன்று உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது  ...

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது – டிரம்ப் பெருமிதம் 'இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது' என அமெரிக்க ...

வட மாநிலத்தவர் குறித்து அமைச்ச ...

வட  மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு – அண்ணாமலை கண்டனம் '' வட மாநிலத்தவர்கள் பன்றி குட்டி போட்டது போன்று ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்த ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்திய அரசு நடவடிக்கை தடை செய்யப்பட்ட முகமைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடிகளின் தடையற்ற ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் ச ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங்கள் முடக்கம் ஆன்லைன் கேமிங்கின் அடிமையாக்கும் தன்மை மற்றும் நிதி இழப்பு ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழ ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படும் – நிதின் கட்கரி நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் தரைவழி ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...