தமிழக முதல்வரின் செயல் வடிவேலுவின் நகைச்சுவை போன்று உள்ளது

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு தமிழக மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மண்ணிப்பு கேட்கவேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், 142 அடியை எட்டுவதற்குமுன், அக்.29ம் தேதி கேரள அமைச்சர்கள் முன்னிலையில் அணை திறக்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக அரசுஅனுமதியின்றி, கேரள அரசு அணையை திறந்ததாக கூறப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் துரைமுருகன், தமிழக அரசு தான் அணையை திறந்தது என்றும், கேரள அமைச்சரும், அதிகாரிகளும் உடனிருந்தனர் என்றும் கூறினார்.

இதேபோல், பேபி அணையை வலுப்படுத்திய பின்னர் முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பேபி அணையை வலுப்படுத்துவதற்கு அதன் கீழ் உள்ள 15 மரங்களை வெட்டிஅகற்ற அனுமதிக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

இதனிடையே, அந்த 15 மரங்களை வெட்டுவதற்கு கேரளவனத்துறை அனுமதி வழங்கியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனதுஅறிக்கையில் தெரிவித்திருந்தார். கேரள அரசுக்கு நன்றி தெரிவித்தும் கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில் திடீர்திருப்பமாக பேபி அணைக்கு கீழ் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதி திரும்ப பெறப்படுவதாக கேரள வனத் துறை அமைச்சர் சசீந்திரன் தெரிவித்துள்ளார்.

மரங்களை வெட்ட தமிழகஅரசுக்கு அனுமதி வழங்கியதற்கு கேரளாவில் எதிர்ப்பு எழுந்ததால் அனுமதியை திரும்பபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக தேனியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறும்போது, முல்லைப் பெரியாறு அணையில்இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதற்கு தமிழக மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்புகேட்க வேண்டும்.

அணையில் 142அடிக்கு தண்ணீர் தேக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் வரையில் பாஜகவின் போராட்டம்தொடரும். இல்லையெனில் கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையை ஒரு லட்சம்பேருடன் சென்று தமிழக பாஜக முற்றுகையிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும், பேபி அணைக்கு கீழேஉள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை அனுமதி வழங்கியதாக நன்றி கடிதம்எழுதிய தமிழக முதல்வரின் செயல் வடிவேலுவின் நகைச்சுவை போன்று உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...