வங்கிகள் மூலம் உர மானியம்

சமையல் எரிவாயு உருளைக்கு மத்தியஅரசு வங்கிக்கணக்கில் மானியம் வழங்குவதுபோல், உரம் வாங்கும் விவசாயிகளுக்கும் வங்கிக்கணக்கில் நேரடியாக மானியம்வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.


 விவசாயப் பணிகளுக்காக விவசாயிகள் வாங்கும் உரத்துக்கான மானியத்தொகையை மத்திய அரசு உரமானியமாக செலுத்திவருகிறது. சில உரங்களுக்கு 90 சதவீதம்வரை அரசு மானியம் வழங்குகிறது.

 இந்த மானியத்தொகையை சம்பந்தப்பட்ட உரம் நிறுவனங்களுக்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை மாற்றி, விவசாயிகளின் வங்கிக்கணக்கில் மானியத்தொகை செலுத்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.


 தமிழகத்தில் விவசாயப்பணிகளுக்கு ஆண்டுக்கு சுமார் 5.5 லட்சம் டன் யூரியா உரம் தேவைப் படுகிறது. இந்த உரம் மத்திய அரசின் மூலமும், தமிழ்நாட்டில் உள்ள உரத் தொழில்சாலைகளில் இருந்து மாநில அரசு மூலமும் கொள்முதல் செய்யப்பட்டு உரம்விற்பனை நிலையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.

 50 கிலோ எடைகொண்ட ஒருமூட்டை யூரியா மானியத்தின் அடிப்படையில் ரூ.270 முதல் ரூ.274 வரை விற்பனை செய்யப் படுகிறது. இந்த 50 கிலோ யூரியாவின் விலை சுமார் ரூ.1,200.

 யூரியா உரம் தழைச்சத்துக்காக அதிகளவில் பயன்படுத்தப் படுகிறது. நெல், தானியம் உள்பட அனைத்து விதமான பயிர்களுக்கும் யூரியா பயன்படுத்தப்படுகிறது. இதனை வாங்கி பயன் படுத்தும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மானியத்தொகையை நேரடியாக செலுத்த அரசு பரிசீலனை செய்து வருவதால், விவசாயிகள் உரத்தைவாங்கும் போது அதற்கான முழுத் தொகையை செலுத்தி வாங்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

 இதனால் கள்ளச்சந்தை கட்டுப்படுத்தப்படும்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...