இந்துஇயக்க நிர்வாகிகள் மீதான தாக்குதல் நீண்டு கொண்டே செல்கிறது

இந்து இயக்க நிர்வாகிகள் கொலையில் குற்றவா ளிகளைக் கண்டறிய மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: வேலூரில் தொடங்கி திண்டுக்கல், கோவை, திருப்பூர், சென்னை என இந்துஇயக்க நிர்வாகிகள் மீதான தாக்குதல் நீண்டு கொண்டே செல்கிறது. நேற்று (அக். 4) சென்னையில் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் நரஹரி தாக்கப்பட்டுள்ளார். இந்ததாக்குதகள் நடத்தப்பட்ட விதத்திலிருந்து அவை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது தெளிவாகிறது.

மதவாத அரசியல் பேசுபவர்கள் வாக்குவங்கி அரசியலுக்காக இந்து இயக்க நிர்வாகிகள் கொல்லப்படுவதை கண்டிப் பதில்லை. வேலூரில் டாக்டர் அரவிந்த்ரெட்டி கொல்லப்பட்டபோது போலி குற்றவாளிகளை கொண்டுவராமல், உண்மையான குற்றவாளிகளை பிடித்திருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்.

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற காவல் துறையினர் அதிக கவனத்துடன் செயல்படவேண்டும். ஆனால், முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையல் காவல் துறை செயல்படுவது துரதிருஷ்டவசமானது.

 

தற்போது நடக்கும் நிகழ்வுகளை முதல்வர் கவனத்துக்கு கொண்டுசெல்வது சாத்தியமல்ல. எனவே, அமைச் சர்கள் இதனை காவல் துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும். இல்லையெனில், இப்பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு குற்றவாளிகளை கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். மக்கள் பொறுமை இழந்தால் சட்டம் – ஒழுங்குகெடும் என்பதை அரசு உணரவேண்டும் இவ்வாறு ராம.கோபாலன் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...