திருப்பூர் பிரகடனம் -ப.ஜ.க-வின் 500 நாள் திட்டம்

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை படிப்பு தொடர்பாக செப்டம்பர் மாதம் லண்டன் செல்லவுள்ள நிலையில், யார் அடுத்த தலைவர் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் திருப்பூரில் அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அண்ணாமலை, கட்சியின் மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், சரத்குமார், மாநிலப் பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாவட்டம், மண்டலம் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் என தனித்தனியாக நடத்தப்பட்டு பின்னர் அனைத்து நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இதில், பேசிய அண்ணாமலை, “அடுத்த 500 நாள்கள் நமக்கு மிக முக்கியமான நாள்களாகும். 500 நாள்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை ஆலோசித்து திட்டமிட வேண்டும். இந்த திருப்பூர் கூட்டத்தின் மூலம் “திருப்பூர் பிரகடனம்” அறிவிக்கப்படுகிறது. இந்த திருப்பூர் பிரகடனம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும்.” என்றார்.

இந்தக் கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து பா.ஜ.க.நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “அண்ணாமலைக்குப் பதிலாக யாருக்கு தலைவர் பதவி வழங்கப்படும் என்ற முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்த்தோம். ஆனால், இதுதொடர்பாக பேசிய அண்ணாமலை மாநிலத் தலைவர் பொறுப்பு யாருக்கென்று கட்சியின் தேசியத் தலைமை அறிவிக்கும் என்று முடித்துக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து `தமிழகத்தை மீட்போம்; தளராது உழைப்போம்’ என்ற `திருப்பூர் பிரகடனம்’ அறிவிக்கப்பட்டது. அதில், தமிழகத்தில் இருந்து தி.மு.க. ஆட்சியை அகற்றுவதும், பா.ஜ.க. ஆட்சியை அமைப்பதும்தான் முக்கிய இலக்காக கொண்டு செயல்படுவோம். இதை சவாலாக எடுத்துக் கொள்ளாமல் சாதனையாக செய்து முடிப்போம் என ஒவ்வொரு நிர்வாகிகளும் உறுதி எடுத்துக் கொண்டனர். வரும் சட்டப் பேரவைத் தேர்தலை மனதில் வைத்து நிர்வாகிகளை மத்தியில் ஊக்கப்படுத்தும் விதமாகவே அண்ணாமலையின் பேச்சு இருந்தது” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...