பாகிஸ்தானில் 5.100 தீவிரவாதிகளின் வங்கிகணக்கில் உள்ள ரூ.40 கோடியை முடக்க அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பதன்கோட் விமானப் படை முகாம் மற்றும் உரி இராணுவ முகாம்மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சர்வதேசரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் இராஜதந்திர நடவடிக்கைகளில் இந்தியா தீவிரப்படுத்தியது. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாயகமாக விளங்குவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்கா விட்டால் நேரடியாக களம் இறங்குவோம் என்று அமெரிக்கா கடந்த ஞாயிற்றுக் கிழமை அறிவித்தது.
இதனால் பதறிப்போக பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதன் ஒருகட்டமாக பதான்கோட் தாக்குலில் மூலையாக செயல்பட்ட ஜெய்ஷிமுகமது தீவிரவாத இயக்கத் தலைவர் மசூத் அசார் மற்றும் அவரது மகன் உட்பட 5,100 தீவிரவாதிகளின் வங்கி கணக்குகள் முடக்கப் பட்டுள்ளது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம், ஸ்டேட்பங்க் ஆஃப் பாகிஸ்தான் வங்கிக்கு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் 3 பிரிவுகளாக தீவிரவாதிகளை வகைப் படுத்தி மொத்தம் 5.100 தீவிரவாதிகளின் ரூ.40 கோடியை முடக்கிவைக்க கேட்டுக்கொண்டுள்ளது.
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.