பாகிஸ்தானில் 5.100 தீவிரவாதிகளின் வங்கிகணக்கில் உள்ள ரூ.40 கோடியை முடக்க அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பதன்கோட் விமானப் படை முகாம் மற்றும் உரி இராணுவ முகாம்மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சர்வதேசரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் இராஜதந்திர நடவடிக்கைகளில் இந்தியா தீவிரப்படுத்தியது. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாயகமாக விளங்குவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்கா விட்டால் நேரடியாக களம் இறங்குவோம் என்று அமெரிக்கா கடந்த ஞாயிற்றுக் கிழமை அறிவித்தது.
இதனால் பதறிப்போக பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதன் ஒருகட்டமாக பதான்கோட் தாக்குலில் மூலையாக செயல்பட்ட ஜெய்ஷிமுகமது தீவிரவாத இயக்கத் தலைவர் மசூத் அசார் மற்றும் அவரது மகன் உட்பட 5,100 தீவிரவாதிகளின் வங்கி கணக்குகள் முடக்கப் பட்டுள்ளது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம், ஸ்டேட்பங்க் ஆஃப் பாகிஸ்தான் வங்கிக்கு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் 3 பிரிவுகளாக தீவிரவாதிகளை வகைப் படுத்தி மொத்தம் 5.100 தீவிரவாதிகளின் ரூ.40 கோடியை முடக்கிவைக்க கேட்டுக்கொண்டுள்ளது.
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.