உத்தரப் பிரதேச சட்ட சபைக்கு 7 கட்டமாக தேர்தல்நடைபெற உள்ளது. இந்நிலையில் எந்தகட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று ‘இந்தியாடுடே’ இதழ் அக்டோபர் முதல் நவம்பர் மாதம்வரை கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில் உத்தர பிரதேசத்தில் பாஜ வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. பாஜ.வுக்கு உத்தரப் பிரதேசத்தில் 31 சதவீத வாக்குவங்கி உள்ளது.
அது கடந்த மாதம் 33 சதவீதமாக உயர்ந்துள்ளது. ரூபாய் நோட்டுகள்செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு உத்தரப் பிரதேசத்தில் பாஜ.வுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. இந்த அடிப்படையில் ஆய்வுசெய்ததில் 206 முதல் 216 இடங்களில் பாஜ வெற்றிபெறும் என்று கணிக்கப் பட்டுள்ளது. எனவே பாஜ தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் மெஜாரிட்டி பலத்துடன் வெற்றிபெறும் என்று சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
தற்போது ஆளும் கட்சியாக உள்ள முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி உள்கட்சி பூசல்காரணமாக இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படும் என்றும், அந்தகட்சிக்கு 92 முதல் 97 இடங்கள்வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சிக்கு 79 முதல் 85 இடங்கள் வரை கிடைக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
காங்கிரசுக்கு 5 முதல் 9 இடங்கள்வரை கிடைக்கலாம் என்று கருத்துக்கணிப்பு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மற்ற சிறியகட்சிகள் 7 முதல் 11 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. முதல்வர் பதவிக்கு அகிலேஷ் யாதவிற்கு. 33 சதவீதம் பேரும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல்வராக 20 சதவீதம் ஆதரவும், கோரக்பூர் எம்பி யோகி ஆதித்திய நாத் முதல்வராக 18 சதவீதம் ஆதரவும் கிடைத்துள்ளது.
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.