ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை கொந்தளிக்கச் செய்யும் மன்மோகன் சிங் கடிதம்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவுபெருகிவரும் நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், கடந்த 2015-ம் ஆண்டு எழுதிய கடிதம் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது. அந்த கடிதத்தில் ஜல்லிக்கட்டை 'புல்ஃபைட்' என மன் மோகன் குறிப்பிட்டுள்ளார். 

காளைகளை மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் 2011-ம் ஆண்டு சேர்த்தது. பின்னர் பீட்டா அமைப்பு தொடர்ந்தவழக்கில்  கடந்த 2014-ம் ஆண்டு, ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. ஜல்லிக்கட்டு ஒரு ஆண்டு நடைபெற வில்லை. 2016ம் ஆண்டு சில கட்டுப்பாடுகளுடன் போட்டியை நடத்தலாம் என மத்திய அரசு உத்தர விட்டது. ஆனால் பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகித் தடையைபெற்றது. இதனால், ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போய் விட்டது. 

தற்போது ஜல்லிக்கட்டு நடந்தேயாக வேண்டுமென இளைஞர்கள் தமிழகம்முழுவதும் போராடி வருகின்றனர். எந்த நிலையிலும் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை என்றால் வீடுதிரும்ப மாட்டோம் என அறிவித்துள்ளனர். உலகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகிவருகிறது.

ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க யார் முக்கிய காரணம் என்பதற்கு இன்னும் தமிழக மக்களுக்கு விடை கிடைக்க வில்லை. போட்டி நடைபெறாமல் போனதற்கு தற்போதைய பாரதிய ஜனதா கட்சிதான் காரணம் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ் சாட்டி வருகின்றன.கடந்த 2011ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக ஜெய்ராம் ரமேஷ் இருந்தபோது காளைகள் காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அப்போது திமுகவும் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. இப்போது போராட்டத்தில் ஈடுபடும் திமுகவினருக்கு காளைகளை காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் சேர்த்தால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பாதிப்புவரும் என்பது முன்பே தெரிந்திருக்கவில்லையா என்பதே இளைஞர்கள் எழுப்பும்கேள்வி. 

இதற்கிடையே கடந்த 2015ம் ஆண்டு ஜல்லிக் கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்மோகன்சிங் எழுதிய கடிதத்தை இப்போது இந்தியா டுடே பத்திரிகை வெளியிட்டுள்ளது.  சமீபத்தில்  தமிழகத்தில்  ஜல்லிக்கட்டு நடந்தால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை ‘ஹ்யூமன்சொசைட்டி சர்வதேச இந்தியா’ அமைப்பின் மேலாண் இயக்குநர் என்ஜி. ஜெய சிம்ஹா விடுத்திருந்தார். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் ஜெய சிம்ஹா கடிதம் எழுதியிருந்தார்.

பீட்டாவைப் போன்றே இந்த அமைப்பும் ஜல்லிக் கட்டுக்கு எதிர்ப்புதெரிவிக்கும் ஒரு அமைப்பு. அதன் தலைவர் ஜெயசிம்ஹாவிற்கு கடந்த 2015ம் ஆண்டு மன்மோகன்சிங் ஒருகடிதம் எழுதியுள்ளார். அதில், ஜல்லிக்கட்டை 'புல்ஃபைட்' என மன்மோகன்சிங் குறிப்பிட்டுள்ளார். 'பொழுது போக்கு என்ற பெயரில் காளைகளை துன்புறுத்தும் ஜல்லிக்கட்டை ஊக்கப்படுத்தக்கூடாது' என்றும் மன்மோகன் சிங் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். ''உங்களுடைய நோக்கத்தில் வெற்றிபெற வாழ்த்து தெரிவிக்கிறேன்'' என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இருகாளைகள் மோதுவதைத்தான் புல்ஃபைட் என்பார்கள். இங்கே காளைகள் மோதுவதில்லை. காளைகளை ஓட விட்டுப் பிடிப்பதற்குப் பெயர்தான் ஜல்லிக்கட்டு. அதுவும் பலவிதிமுறைகள் வகுத்த பின்னர், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு மிகுந்த ஒரு விளையாட்டாகவே தெரிகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...