104 செயற்கைக் கோள்களை ஒரேநேரத்தில் விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ புதிய உலகசாதனை

104 செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி – சி37 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப் பட்டது. இதன் மூலம் 100க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை ஒரேநேரத்தில் விண்ணில் செலுத்தி இஸ்ரோ புதிய உலகசாதனை படைத்துள்ளது. ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சிமையத்தில் இருந்து 714 கிலோ எடை கொண்ட கார்ட்டோசாட்-2 செயற்கைகோள் மற்றும் 664 கிலோ எடை கொண்ட 103 செயற்கை கோள்களும் பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட்மூலம் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.
 

320 டன் எடை கொண்ட இந்த ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது. இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைக்கோள், ஐஎன்எஸ்-1ஏ, ஐஎன்எஸ் 1-பி என 2 நானோ செயற்கைக்கோள்கள், இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு சொந்தமான 5 நானோ செயற்கைக்கோள், அமெரிக்காவின் 96 நானோ செயற்கைக் கோள்கள் என மொத்தம் 104 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் சுமந்துசென்றது.

கார்டோசாட்-2 செயற்கைக்கோளின் எடை 714 கிலோ. ஒவ்வொரு நானோ செயற்கைக்கோளும் 5 முதல் 10 கிலோ வரை எடைகொண்டது. இந்த செயற்கைக் கோள்கள் அனைத்தும் பூமியில் இருந்து 505 கி.மீ. தொலைவில் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.

கார்டோசாட்-2 செயற்கைக்கோள் அனுப்புகிற படங்கள் வரை படப்பயன்பாடு, நகர்ப்புற, ஊரகப் பகுதிகளின் பயன்பாடு, கடலோரப் பகுதி பயன்பாடு, சாலை இணைப்பு கண்காணிப்பு, நீர்விநியோகம், தரைபயன்பாட்டு வரைபடங்கள் உள்ளிட்டவற்றுக்கும் புவியியல் சார்ந்த அம்சங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிவதற்கும் பெரிதும் உதவி கரமாகவும், சிறப்புக் குரியதாகவும் இருக்கும். இஸ்ரோ இதற்கு முன்பு ஒரேநேரத்தில் 20 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியதுதான் அதிகபட்சமாக இருந்தது. ஒரேநேரத்தில் 104 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படுவது இஸ்ரோ வரலாற்றில் இது முதல்முறை.

இதுவரை அதிகபட்சமாக 37 செயற்கை கோள்களை ரஷ்யா ஏவியதுதான் உலகசாதனையாக இருந்து வந்தது.

தற்போது 104 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்துவதன் மூலம், ரஷ்யாவின் சாதனை முறியடிக்கப் பட்டுள்ளது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள் ஆகும். 104 செயற்கைக் கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ புதிய உலகசாதனையை படைத்துள்ளது. இதற்குமுன் 37 செயற்கைகோள்களை ரஷ்யா ஒரேநேரத்தில் விண்ணில் செலுத்தியதே உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...