ஸ்டிக்கர் ஒட்டும் கனிமொழி

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் மத்தியஅரசின் திட்டத்துக்கு, கனிமொழி ஸ்டிக்கர் ஒட்டபார்ப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்  குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இது தொடர்பாக  கூறியிருப்பதாவது;

”தமிழகம் வந்த பிரதமர் குலசேகரப் பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளத்துக்கான அடிக்கல்லை நாட்டியுள்ளார். அதனைதொடர்ந்து, ரோகிணி 6 H 200 சிறிய வகை ராக்கெட்டை திட்டமிட்டபடி இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதுஒவ்வொரு தமிழருக்கும் பெருமைமிகு தருணம்.

ஆனால் இது முன்னாள் முதலமைச்சர் கருணா நிதியின் கனவுதிட்டம் எனவும், மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பதவிவகித்தபோது குலசேகர பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் கொண்டு வருவதற்காக கருணாநிதி கடிதம் எழுதியதாகவும் கூறி திமுக எம்.பி. கனிமொழி மத்திய அரசின் இந்ததிட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டப் பார்க்கிறார்.

இந்தியாவின் முதல் ராக்கெட்தளம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது தமிழகத்தில்தான். மூத்த விண்வெளி ஆய்வு விஞ்ஞானி நம்பி நாராயணன் எழுதிய “ரெடி டு ஃபயர்” என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களை திருமதி கனிமொழிக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

தமிழகத்தில் இடம்கேட்டு வந்த முதுபெரும் விண்வெளி ஆய்வு விஞ்ஞானி விக்ரம் சாராபாயை அப்போதைய திமுக அமைச்சர் மதியழன் எப்படி அவமானப் படுத்தினார் என்பது தெரியவரும். அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரை அவர்கள் உடல் நலம் சரியில்லாத நிலையில் திமுகவினர் இஸ்ரோ குழுவினருக்கு ஒத்துழைப்பு அளிக்காதது மட்டுமல்லாமல் விக்ரம் சாராபாயை அவமானப்படுத்தி அனுப்பிய சம்பவம் நாடறிந்த ஒன்று.

ஸ்டிக்கர் ஒட்டுவதைகூட சரியாக செய்ய தெரியாமல் சீனக்கொடி பொருந்திய ராக்கெட் படத்துடன் விளம்பரம் வெளியிடுகிறார்கள் திமுகவினர். தேச பக்தி என்றால் கிலோ என்னவிலை என கேட்கும் திமுகவினரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். பாரதநாட்டின் மீதும் இஸ்ரோவின் சாதனைகளை விடவும் இவர்களுக்கு சீனா மீது பாசம்பொங்குவதில் வியப்பில்லை.

திமுகவினர் மத்திய அமைச்சர்களாக பதவி வகித்தபோது திருமதி கனிமொழி முயற்சி எடுத்து குலசேகர பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தை கொண்டு வந்திருக்கலாமே. ஊழல்செய்து கொள்ளையடிப்பதற்காவே மத்திய அரசில் அமைச்சர்களாக பவனி வந்தவர்களுக்கு தமிழகத்திற்கு திட்டங்களை கொண்டுவருவதில் எப்படி அக்கறை இருக்கும்?

ஆனால் தமிழகத்தில் ராக்கெட்ஏவுதளம் அமைந்தால் இஸ்ரோவின் திட்டங்களை செயல்படுத்த சரியாக இருக்கும் என கனவுகண்ட இந்திய விண்வெளி ஆய்வு திட்டங்களின் நாயகர்களான சதீஷ் தவான் மற்றும் விக்ரம் சாராபாயின் கனவுகளை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி நனவாக்கியுள்ளார்.”

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...