எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் மூலம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒன் வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவு தளத்தில் இருந்து , இன்று காலை 9 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

 

இதைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் திரு சோம்நாத் பேசுகையில்,

 

இந்த ராக்கெட் வெற்றிக்கு உழைத்த என்எஸ்ஐஎல், இஸ்ரோ மற்றும் ஒன் வெப் நிறுவனங்களுக்கு வாழ்த்துகள். செயற்கைக்கோள்கள் சரியான புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து பிஎஸ்எல்வி ராக்கெட் வரும் ஏப்ரல் மாதத்தில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அடுத்தடுத்து ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்கள் ஏவப்பட உள்ளன. இவ்வாறு  இஸ்ரோ பல முக்கிய பணிகளில் ஈடுபட்டுள்ளது என்றும் இது போன்ற வர்த்தக ரீதியான ஏவுதலுக்கு இஸ்ரோவுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இதில் பயன்படுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட், இந்தியாவின் கனவு திட்டமான மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திலும் பயன்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

*

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...