உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இந்தவெற்றி மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளதை காட்டுகிறது என பாஜக ராஜ்ய சபா எம்.பி இல. கணேசன் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்துமாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட உத்தர பிரதேசத்தில் மிகப் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்திலும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். பாஜக தலைவர்கள் உற்சாககருத்தினை பதிவிட்டு வருகின்றனர். பாஜக ராஜ்ய சபா எம்.பி இல. கணேசன் ஐந்துமாநில தேர்தல் பற்றி செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர், மோடியின் கறுப்புபண ஒழிப்பு, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.