யோகி ஆதித்யநாத் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து ஒரு முதல்வர்

இது வரை தென்னிந்தியாவில் பெரிதாக அறியப்படாத பா.ஜ.க தலைவர் யோகி ஆதித்யநாத். இவர் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். ஐந்து முறை ஒரே தொகுதியில் இதுவரை MP ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட தாக்கூர் இனத்தைச் சேர்ந்தவர். இந்த இனம்தான் இன்றும் பீகாரில் சவரத்தொழில் செய்பவர்கள். இவர் கோரக்நாத் மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். அத்துடன் ஒரு கூடுதல் செய்தி கோரக்நாத் மடத்தில் இருக்கும் பல பண்டிதர்கள் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல….!

இதுவரை இவரைப் பற்றி யாருமே அறியாத செய்தி ஒன்றை ஸ்ரீ சூரஜித் தாஸ்குப்தா தன்னுடைய பதிவில் கூறியுள்ளார். தெருவில் அலைந்து கொண்டிருந்த ஒரு ஆதரவற்ற சிறுவனை இவர் கண்டெடுத்து தன்னுடனேயே வைத்துக் கொண்டுள்ளார். அந்தச் சிறுவனுக்குத் தன்னைப் பற்றிய அடையாளமாக தன் பெயரைத் தவிர வேறு எதையுமே சொல்லத் தெரியவில்லை. அது ஒரு இஸ்லாமியப் பெயர்.

ஆம்…. அவன் ஒரு இஸ்லாமியச் சிறுவன். யோகியை ஒரு தீவிர ஹிந்துத்வவாதியாக பட்டயமிடும் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது, யோகியின் வலது கரமாக இருக்கும் இந்தச் சிறுவன் இப்போதும் ஒரு இஸ்லாமியன் என்பதே……! இவர்மீது வெறுப்பு அரசியலை உமிழ்பவர்கள், தங்களை நடுநிலை என்று சொல்லிக்கொள்பவர்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது இதுவே….!

அதே நேரத்தில், "தாய் மதம் திரும்ப ஆசைப் படுபவர்களை கர் வாப்ஸி மூலம் ஹிந்து மதத்திற்கு அழைத்துவந்துள்ளார்"…!

இந்தியாவில் இருக்கும் எத்தனையோ மடங்களில் யோகிகளாகவும், பண்டித்தர்களாகவும் இருப்பவர்களில் பலர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்களே….! இந்தச் செய்தியை வெளிக் கொணர இனிமேல் பிஜேபி முனையும் என்பது சந்தோஷமான செய்தி. இடதுசாரிகளால் பா.ஜ.க ஒரு உயர்ஜாதியை ஆதரிக்கும் அரசியல் கட்சி என்கிற மாயை இனிமேல் உடைத்தெறியப்படும்.

பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த எத்தனையோ ஆழ்வார்களும், நாயன்மார்களும், தாக்கூர்களும், ரவிதாசர்களும் இறைத் தொண்டு ஆற்றியதை பொதுவெளியில் கொண்டுவர மோடிஜி இப்போது செய்துள்ள இந்தச் சமுதாயத் சீர்திருத்தம் பெரிதளவில் பயன்படும்.

உண்மையான சகிப்புத்தன்மையும், அற்புதமான நாகரிகமும் கொண்ட ஹிந்துமதம் மூலம் அதன் தத்துவங்களை உலகளாவிப் பரவச் செய்ய இவரை முதலமைச்சர் பதவியில் அமர்த்தியது ஒரு முதல் படிக்கல்லாக அமையலாம்.

இவரை ஹிந்துமத வெறியார் என்று குற்றம் சாட்டுபவர்கள், அவர் எத்தனை பேருக்கு ஃபத்வா கொடுத்தார் என்ற பட்டியலை வெளியிட வேண்டும்.

இனிமேல் பாரதத்தில் இப்படித்தான்…..!
ஜெய்ஹிந்த்!
பாரத் மாதாகி ஜே!

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...