இரட்டை இலையை முடக்கி அரசியல் ஆதாயம் தேட வேண்டிய நிலையில் பா.ஜனதா இல்லை

அ.தி.மு.க. பிளவுபட்டதைதொடர்ந்து அந்த கட்சியின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்புஇருப்பதாக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறி வந்தார்.

இரட்டை இலையை முடக்க பா.ஜனதா சதிசெய்வதாக வைகை செல்வனும் குற்றம் சாட்டினார். இந்தநிலையில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருப்பது பற்றி டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாவது:-

1989-ல் இதேபோன்ற ஒரு அரசியல் சூழல்உருவானது. அப்போதும் இரட்டைஇலை முடக்கப்பட்டது. இளம் வயதிலேயே இந்த அரசியல் சூழ்நிலைகளை கவனித்துவருவதால் இப்போதும் அதற்கான வாய்ப்பு உண்டு என்ற எனது கருத்தை தெரிவித்திருந்தேன்.

அந்த கட்சியின் சின்னத்தை முடக்கி அரசியல் ஆதாயம் தேட வேண்டிய நிலையில் பா.ஜனதா இல்லை. சின்னம் முடக்கத்துக்கு பா.ஜனதா காரணம்அல்ல.

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப் பட்டதுதான் அ.தி.மு.க. அவர்கள் இருவரது நோக்கமும் காப்பாற்றப் பட்டதாக தெரியவில்லை. எனவே முடக்கி வைக்கப்படுவது தான் சரியானதாக இருக்கும்.

மக்கள்விரும்பும் அ.தி.மு.க., ஜெயலலிதா சுட்டிக்காட்டிய அ.தி.மு.க. இப்போது இருக்கிறதா?காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மோடிகையில் இரட்டை இலை இருப்பதாக கூறுகிறார். அரசியல் ஞானம் தெரிந்தவர்கள் இவ்வாறு கருத்து தெரிவிக்கலாமா?

சின்னம் கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி ஆர்.கே.நகரில் தினகரன் மிகப்பெரிய பின்னடைவை சந்திப்பார்.

ஓ.பன்னீர் செல்வம் கையில் அதிகாரம் இருந்த போதே ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க எதுவும் செய்ய வில்லை என்ற கருத்தும் மக்களிடையே இருக்கிறது.

திமுக.-காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. காங்கிரஸ்கட்சியின் பெரிய தலைவர்களான வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித் ஆகியோர் அதிமுக.வுக்கு இரட்டை இலையை பெற்றுக் கொடுக்க போராடுகிறார்கள். இதுதான் கூட்டணி தர்மமா? கூட்டணி தர்மப்படி நடப்பதாக இருந்தால் தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேவரவேண்டும்.

மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு நிச்சயமாக நல்லமாற்றத்தை தரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...