இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல்

‘விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் போடுகிறார். அவருக்கு சமூகநீதி பற்றி பேச அருகதை கிடையாது’ என மத்திய அமைச்சர் எல்.முருகன் கடுமையாக சாடியுள்ளார்.

திருமாவளவன் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன். எல்லாரும் கவனமாக கேளுங்க. சமூகநீதி பற்றி பேசுவதற்கு திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. சமூக நீதி குறித்து அம்பேத்கர் கூறியது, அனைத்து மக்களுக்கும், கடைக்கோடியில் இருக்கும் மக்கள் அனைவரும் இடஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்றார். இதுதான் அம்பேத்கர் எண்ணம், கொள்கை. ஆனால் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த திருமாவளவன் இரட்டை வேடம் போடுகிறார்.

திருமாவளவன் எப்படி ஒரு தலித் தலைவராக இருக்க முடியும். அருந்ததியர் இட ஒதுக்கீடை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த திருமாவளவன் எப்படி தலித் மக்கள் தலைவராக இருக்க முடியும். இவர் எப்படி ஒட்டுமொத்த தமிழகத்தின் தலைவராக இருக்க முடியும்.

அவருடைய சின்ன கட்சி, அந்த அமைப்புக்கான தலைவராக தான் நான் பார்க்கிறேன். அவர் அனைத்து தலித் மக்களையும் ஒரே பார்வையில் பார்க்க வேண்டும். அவருடைய உண்மை முகம் வெளிப்பட்டு கொண்டு இருக்கிறது. அவர் சமூகநீதி பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.

சமூகநீதி என்றால் கடைக்கோடியில் இருக்கும் ஒவ்வொரு தலித் மக்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பது தான் அம்பேத்கர் கோரிக்கை. இதற்கு தான் அவர் அரசியலமைப்பு சட்டத்தில் இட ஒதுக்கீடை கொண்டு வந்தார். அந்த இடஒதுக்கீடை நீர்த்து போக செய்யும் அளவிற்கு செயலை திருமாவளவன் செய்து கொண்டு இருக்கிறார்.

அதனால் திருமாவளவன் எல்லாம் முதல்வர் ஆகுவதற்கான கனவு எல்லாம் நடக்காது. கவர்னர் உண்மையைச் சொன்னால் தி.மு.க.,வினருக்கு கசக்கிறது; கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே முரண்பாடு இருந்து கொண்டேதான் இருக்கிறது. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...