புற்றுநோய்க்கான மருத்துவம்

 பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி
பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு இரத்தம், சீழ், வெள்ளைப்பாடு போன்றவைகள் ஏற்படும், அவைகளை நீக்க வழிகள் .

காலையும் – மாலையும் விளக்கெண்ணெய், வேப்பஎண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சமமாகக் கலந்து வைத்துக்கொண்டு உணவுக்கு முன் ஒரு தேக்கரண்டி அளவு உள்ளுக்கு உட்கொள்ள வேண்டும்.

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் – நன்கு மண்சட்டியில் வேக வைத்து பனை வெல்லம் கலந்து குடித்து வரவேண்டும்.

மாமரத்தின் பட்டையை நன்கு சுத்தம் செய்து விட்டு மண் சட்டியில் கஷாயமிட்டு, பனைவெல்லம் போட்டு காலையும் மாலையும் ஒரு குவளையளவு குடித்துவர வேண்டும். அவ்வாறு குடித்து வந்தால் சில மாதங்களில் குணமாகும்.

(உணவில் காரம், புளி, உப்பு போன்றவற்றைப் பயன்படுத்தாமல் பால்சாதம், மோர்சாதம் போன்றவற்றை மட்டும் உட்கொள்ள வேண்டும்).
உடலில் எங்கு புற்று நோய் ஏற்பட்டாலும் கீழ்க்கண்ட மருந்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு குறைந்தது ஆறு மாதங்கள் பத்தியத்தோடு உட்கொள்ள வேண்டும்.

முற்றிய வேப்பிலை, வில்வ இலை, துளசி இலை, மா விலை, அருகம்புல், அத்தியிலை, கருப்பு வெற்றிலை, கீழா நெல்லி, மஞ்சள் கரிசலாங்கண்ணி, நித்யகல்யாணி இலை இவைகளைச் சம அளவாகச் சேகரித்து நிழலில் உலர்த்திப் பொடித்து மூன்று வேலைகளிலும் ஒரு தேக்கரண்டி பொடியாக காய்ச்சாத பாலில்போட்டுக் குடித்துவர வேண்டும். வேக வைக்காத காய்கறிகளையே காலையிலும் மாலையிலும் உட்கொள்ள வேண்டும். காலை இரண்டு காரட்டுகள், இரண்டு தக்காளி, அரையாக்கப்பட்ட பச்சை வெங்காயம் – மதியம் பப்பாளி, வாழை, ஆரஞ்சு கொய்யா போன்ற பழங்கள் – ஒரு வேளை கோதுமை – புழுங்கலரிசி ¾ ஆழாக்கு வீதம் சுடுநீரில் ஊறவைத்து எடுத்துக்கொண்டு பண்ணை வெல்லம் கலந்து உட்கொண்டு வரவேண்டும். இவ்வாறே பச்சைப் பட்டாணி, பச்சைக் கடலை போன்றவற்றையும் அவிக்காமல் சுடுநீரில் ஊறவைத்துத் தின்ன வேண்டும். காடுகளில் அலைந்து மேய்ந்து வரும் பசு மாடுகளின் பாலையும் காடுகளின் அலைந்து மூலிகைகளைத் தின்னும் வெள்ளாடுகளின் பாலையும் காய்ச்சாமல் குடித்து வரவேண்டும். அவ்வாறு சில மாதங்கள் உட்கொண்டு வந்தால் அல்லது சில ஆண்டுகள் உட்கொண்டு வந்தால் பூரண குணமடைய வாய்ப்புண்டு.

வெண் பூசணிச்சாரும், அருகம்புல் சாரும் தினம் விட்டுத் தினம் மாறி மாறி பருகி வரலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...