ஆர்கே. நகர் தேர்தலை இந்தியாவுக்கே முன் உதாரணமாகவும், எடுத்துக் காட்டாகவும் நடத்தி முடிக்கவேண்டும்

மத்தியமந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

ஆர்கே. நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படவேண்டும். எந்தவொரு அழுத்தத்துக்கும் ஆளாகாமல் காவல் துறையும், செயல்படவேண்டும். ஆர்கே. நகர் தேர்தலை இந்தியாவுக்கே முன் உதாரணமாகவும், எடுத்துக் காட்டாகவும் நடத்தி முடிக்கவேண்டும்.

அங்கு வாக்காளர்களுக்கு தங்கம் வழங்கப்படுகிறது. எடைக்கு எடை தங்கம்வழங்க 2 கழக கட்சிகளும் தயாராக உள்ளன. இதில் ஒருகட்சி மற்றொரு கட்சி மீது புகார் கூற முடியாது. பணம்கொடுப்பது, இலவச பொருட்கள் கொடுப்பது போன்றவற்றை தொடங்கியதே தி.மு.க.வினர் தான். வாக்காளர்களுக்கு பணம்கொடுப்பதை தடுக்க வேண்டும். கள்ள ஓட்டு போடுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆர்.கே. நகர் தேர்தலில் பாரதியஜனதா தனது முழுபலத்தையும் காட்டும். பாரதிய ஜனதா வெற்றியை நோக்கி தனதுபயணத்தை தொடங்கி உள்ளது.

அ.தி.மு.க.வின் இரட்டைஇலை சின்னம் முடக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. அது எம்ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்ட சின்னம். தற்போது அந்தசின்னம் முடக்கப்பட்டு உள்ளதால் தொண்டர்களுக்கு பெரிய அவமானம் ஏற்பட்டுள்ளது. சின்னம் முடக்கப்பட்டதற்கு அ.தி.மு.க. தலைமைதான் காரணம் ஆகும். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட குழப்பம்தான் இதற்கு காரணம். இதன் மூலம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கே அவமானத்தை உண்டாக்கி உள்ளனர்.

1989-ல் இரட்டை இலைசின்னம் முடக்கப்பட்டது. அப்போது அ.தி.மு.க. இரண்டாக பிரிந்ததால் அந்தசின்னம் முடக்கப்பட்டது. அப்போது முடக்கப்பட்டதற்கு மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசை யாரும் குற்றம் சாட்டவில்லை.

நடிகர் ரஜினிகாந்த் வீடுவழங்க இலங்கை செல்வதில் தவறு இல்லை. தமிழனுக்கு நல்லதுசெய்பவர்கள் யாராக இருந்தாலும், எனக்கு தனிப்பட்ட முறையில் எதிரியாக இருந்தால்கூட அவரை பாராட்டுவேன்.

தம்பித்துரை, கமலஹாசன், பன்னீர் செல்வம் என எல்லோருமே எங்களுடன் இணக்கமாகதான் உள்ளனர். தனிப்பட்ட முறையில் திருமா வளவன், திருநாவுக் கரசர் கூட இணக்கமாக உள்ளனர். பாஜக பொறுத்தமட்டில் அனைவருடனும் நட்புவைக்க விரும்புகிறது.

தமிழகத்தின் கல்வித்தரம் கடந்த 50 ஆண்டுகளில் சீரழிந்துள்ளது. இதற்குகாரணம் இருகட்சிகளும் செய்த துரோகம்தான். அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக கொண்டுவர வேண்டும்.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.39 ஆயிரம்கோடி கேட்கிறார்கள். மத்திய அரசு ரூ.1748 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் எந்த அடிப்படையில் தமிழகஅரசு இவ்வளவு தொகையை கேட்கிறார்கள் என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...