யாரோ ஒருவர் என்னை குற்றம் சாட்டுவது குறித்து கவலையில்லை

கட்சியில் இருந்து விலகுபவர்கள் என்னை வாழ்த்தவேண்டும் என்பது கிடையாது. யாரோ ஒருவர் என்னை குற்றம் சாட்டுவது குறித்து கவலையில்லை என தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: சென்னையில் கனிமொழி பங்கேற்றகூட்டத்தில் பெண் போலீசிடம் அத்துமீறிய திமுக.,வினர் மீது 2 நாட்களாக ஏன் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் விளக்கம் அளிக்க வேண்டும். திமுக.,வினர் நிர்பந்தம் கொடுத்தனரா, அமைச்சர் அழுத்தம் கொடுத்தனரா என விளக்கவேண்டும்.

புதுக்கோட்டையில் தொடர்ந்து ஒரேகிராமத்தில் பிரச்னை ஏற்படுகிறது. எறையூர் கிராமத்தில் ஒரேமாதத்தில் பிரச்னை நடக்கிறது. இரட்டை டம்ளர் முறை, கோவிலில் சாமிகும்பிடுவதில் பிரச்னை, குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட பிரச்னை என நடந்துள்ளது. ஜாதி இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என திமுக சொல்கிறது.

ஆனால், என்ன நிலையில் இருக்கிறது என்பதற்கு எறையூர் கிராம பிரச்னையேசாட்சி.இது எல்லாம் முதல்வர் கவனத்திற்கு சென்றதா. அங்கு அமைதி பேச்சு வார்த்தை நடந்ததா, இந்த குற்றத்தை செய்தது யாராக இருந்தாலும்கூட அவர்கள் மீது தனிப்படை போட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து தமிழக மக்களின் கேள்வியாக உள்ளது.

திராவிட மாடல் அரசின் ஆர்கே நகர் தொகுதி திமுக எம்எல்ஏ எபினேசர் முன்னிலையில், மாநகராட்சி ஊழியரை கட்டாயப் படுத்தி வெறும் கைகளால் கழிவுநீர் சாக்கடையை சுத்தம்செய்ய வைக்கப்பட்டுள்ளார். அதனை திமுக எம்எல்ஏ ரசித்துகொண்டு இருக்கிறார்.

அவர் மீது 1993ல் கொண்டுவந்த சட்டத்தை பதிவுசெய்ய வேண்டும். இந்த சட்டத்தில் ஒராண்டு கடுங்காவல் சிறை தண்டனையுடன் பெயில் கிடைக்காது. எம்எல்ஏ மீதும் வன்கொடுமை சட்டத்தின்கீழும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இது அனைவருக்கும் பாடமாக இருக்க வேண்டும்.

எம்எல்ஏ தன்னை ஹீரோவாக காண்பிக்க, மாநகராட்சி ஊழியரை வெறும்கைகளால் சுத்தம் செய்ய வைத்துள்ளனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து , கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும். இதனை செய்தால், தமிழக மக்களுக்கான முதல்வர். சமூகநீதியை நிலைநாட்டக்கூடிய முதல்வர் என கூறலாம். இல்லையென்றால், ஜாதி ஆதிக்கம் மிகுந்த கட்சிதான் திமுக. இது புதுக்கோட்டையில் இருந்து தெரிகிறது.

திமுக.,வை சேர்ந்த முன்னாள் எம்.பி., மஸ்தான் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் எம்.பி.,க்கே பாதுகாப்பு இல்லாதசூழல் நிலவுகிறது. கொலையை செய்தவர்களுக்கு தைரியம் எங்கு இருந்துவந்தது. மஸ்தான் மனைவி சண்டையிட்டு பிரேத பரிசோதனை செய்த பிறகுதான், முடிவு கிடைத்துள்ளது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு இப்படி தான் உள்ளது.

ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை, பாரத் தோடோ யாத்திரையாக மாறியுள்ளது. யாரெல்லாம் இந்தியாவை பிரிக்கிறார்களோ அவர்களுடன் இணைந்து ராகுல் நடக்கிறார். நேற்று ரா முன்னாள் தலைவர் துலாத் பங்கேற்றுள்ளார். இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்னர், பாகிஸ்தான் உளவுத் துறையான ஐஎஸ்ஐ அமைப்பு தலைவர் துரானியுடன் இணைந்து புத்தகம் எழுதியுள்ளார். அவர்மீது ஏராளமான புகார் உள்ளது. அவரை போன்ற நபர்களுடன் இணைந்து ராகுல்நடக்கிறார். துலாத்தின் பேச்சை 6 மாதமாக இந்தியா கவனித்துகொண்டுள்ளது. இவர் ஐஎஸ்ஐ க்கு ஆதரவாகவும், எல்லை தாண்டிய தாக்குதல் குறித்து இந்தியாவை குற்றம்சாட்டியும் பேசியுள்ளார்.

கட்சியில் இருந்து யார் விலகினாலும் அவர்களை வாழ்த்திவழியனுப்புவது தான் எனது கொள்கை. கட்சியில் இருந்து வெளியே செல்கிறவர்கள் என்னையும், கட்சியையும் புகழ்ந்து பேசிவிட்டு செல்லவேண்டும் என்பது கிடையாது. மகளிர் அதிகம்பேர் பாஜ.,வில் இணைகின்றனர். யாரோ ஒருவர் புகார் கூறினால் அதுபற்றி கவலையில்லை.

என் மீது குற்றம் சொல்லாதவர்கள் யார். என்மீது குற்றம்சொல்வது சரிதான். அப்போதுதான் பேசுபொருளாக இருக்க முடியும். எந்த பத்திரிகை என்னை பற்றி சொன்னாலும் அவர்களுக்கு பதில் மவுனம்தான். கட்சியில் இருந்து விலகுபவர்களுக்கும் அதேபதில்தான். அவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க.

ஆதார் இருக்கும் போது மக்கள் ஐ.டி., எதற்காக கொண்டு வரவேண்டும். தனி நாட்டிற்கான அடித்தளம் குறித்து திமுக கனவில்கூட நினைத்து பார்க்க கூடாது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...