‘அவுரங்கசீப் மதவெறி பிடித்தவர் என நேருவே குறிப்பிட்டுள்ளார்’: ராஜ்நாத் சிங்

”காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் நேருவே, முகலாய மன்னர் அவுரங்கசீபை மதவெறி பிடித்தவர்; கொடூரமான ஆட்சியாளர் என அழைத்துள்ளார்,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில், முகலாய மன்னர் அவுரங்கசீபின் கல்லறை உள்ளது. இதை அகற்றக் கோரி, ஹிந்து அமைப்புகள் சில நாட்களாக வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் நேற்று நடந்த விழாவில், மேவார் ஆட்சியாளர் மஹாராணா பிரதாப்பின் திருவுருவ சிலையை திறந்து வைத்து, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் பேசியதாவது:

தைரியம் மற்றும் தேச பக்தியின் உருவகமாக மஹாராணா பிரதாப் இருந்தார். அவரிடம் இருந்து சத்ரபதி சிவாஜி மஹாராஜ் உத்வேகம் பெற்றார்.

இடதுசாரி சார்புகளை கொண்ட சுதந்திரத்திற்கு பிந்தைய வரலாற்றாசிரியர்கள், மஹாராணா பிரதாப் மற்றும் சிவாஜி மஹாராஜுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்காமல், அவுரங்சீப் புகழ் பாடினர்.

அவுரங்கசீபை ஒரு ஹீரோ என நினைப்பவர்கள், அவர் ஒரு மதவெறி பிடித்தவர்; கொடூரமான ஆட்சியாளர் என, நேரு எழுதியதை படிக்க வேண்டும்.

மஹாராணா பிரதாப், சிவாஜி மஹாராஜ் ஆகியோர் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல. இருவரும் முஸ்லிம்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கியவர்கள். அவுரங்காபாதை சத்ரபதி சம்பாஜி நகர் என மாற்றியதில் எந்த தவறுமில்லை.

பாபர், தைமூர், அவுரங்கசீப், கோரி, கஸ்னவி ஆகியோரைப் புகழ்ந்து பேசுவதால், எந்த முஸ்லிம் ஓட்டுகளும் கிடைக்காது. இவர்களை புகழ்பவர்கள், நம் நாட்டு முஸ்லிம்களை அவமதிக்கின்றனர். எங்களை பொறுத்தவரை, இந்தியர்கள் அனைவரும் சமமானவர்கள்; எந்த பாகுபாடும் கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர் ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...