அற்புதமான தெய்வீகம் நிறைந்த ராமநவமி வாழ்த்து

ராம நவமி தினத்தையொட்டி நாட்டுமக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
'அற்புதமான தெய்வீகம் நிறைந்த ராமநவமி தினத்தை கொண்டாட உள்ள நாட்டுமக்களுக்கு இதயம்கனிந்த வாழ்த்துகள்' என்று சுட்டுரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராமர் பிறந்ததினம் ராம நவமி என்றழைக்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் வாழ்த்து: இதனிடையே, ராமநவமியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக, சுட்டுரையில் அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
ராம நவமியை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாளில் நாடு வளமும், வளர்ச்சியும் அடைவதற்கு அனைவரும் தங்களை மறு அர்ப்பணிப்பு செய்ய வேண்டுகிறேன்.


சிறந்த குணங்கள், உயர்ந்த பண்புகளின் ஒப்பற்றவடிவமாகத் திகழ்ந்தவர் ராமபிரான். அவரை உதாரணமாகக் கொண்டு, நல்லறத்தை நோக்கியபாதையில் நாம் பயணிக்கவேண்டும். இந்த விழாவானது அனைத்துத் தரப்பு மக்களையும் உணர்வுபூர்வமாகவும், மனப்பூர்வமாகவும் ஒன்றுபடுவதற்கு உதவட்டும் என்று அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...