மூங்கில் மரங்களை வளர்க்க, தமிழக அரசு ஊக்குவிக்கவேண்டும்

வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் மூங்கில்குச்சிகளை நிறுத்திவிட்டு, தமிழகத்தில் மூங்கில் மரங்களை வளர்க்க, தமிழக அரசு ஊக்குவிக்கவேண்டும்,'' என, மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் பேஸ்: 2 பகுதியில் உள்ள தனியார்கம்பெனியில், முள் இல்லா மூங்கில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒருநாளைக்கு, ஒன்றரை அடி உயரம்வரை வளரும் இந்த மூங்கில் மரங்கள் குறித்து ஆய்வுமேற்கொள்ள, குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் ஓசூர் வந்தார்.

அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது: சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து, ஊதுபத்திகளை தயாரிக்க தேவையான மூங்கில்குச்சிகளை, 60 சதவீதம்வரை, இறக்குமதி செய்கிறோம். இந்தியாவில் ஊதுபத்திகளுக்கான தேவை அதிகமாக உள்ளதால், மூங்கில்குச்சி இறக்குமதியை நிறுத்திவிட்டு, மூங்கில் மரங்களை விவசாயிகள் வளர்க்க தமிழக அரசு ஊக்கப்படுத்தவேண்டும். சிறு, குறு தொழில்கள் துவங்க, வங்கிகளில் உத்தரவாதம் இல்லாமல் வழங்கப்பட்டுவந்த, ஒரு கோடி ரூபாயை, பிரதமர் மோடி, இரண்டு கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார். சிறு, குறுந் தொழிற்சாலைகள் வளர்ச்சியில் தமிழகம் முன்னிலையில்தான் உள்ளது. மானியம், சட்ட பாதுகாப்பு, கடன் உதவி உள்ளிட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்களை, மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...