பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க உற்பத்தி வசதிகளை மேம்படுத்துவது அவசியம் கிரிராஜ் சிங்

புதுதில்லியில் உள்ள யஷோ பூமி மாநாட்டு மையத்தில் 71-வது இந்திய சர்வதேச ஆயத்த ஆடை கண்காட்சியை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் இன்று தொடங்கிவைத்தார். இந்தக் கண்காட்சி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் ஏற்றுமதியாளர்களுக்கு தனித்துவமான சந்தைத் தளமாகும் என்றும் உலகத்திற்கு இந்தியாவின் நவீன போக்குகள் மற்றும் பலவகையான தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதாகஇருக்கும் என்றும் அமைச்சர்  தொடக்க உரையில் குறிப்பிட்டார். இந்தியாவில் உற்பத்தி என்ற பிரதமரின்தொலைநோக்குப் பார்வையை நனவாக்க உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என்று அவர் கூறினார்.

இந்தியா தற்போது 7.2 சதவீத ஜிடிபி வளர்ச்சி விகிதத்துடன் வேகமாக வளர்ந்துவரும் உலகப் பொருளாதாரங்களில் ஒன்றாக  உள்ளது என்றும் 2027-28-ல் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் ஆயத்த ஆடைகள் மற்றும் ஜவுளிகளின் சந்தைமதிப்பு தற்போது 165 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் நிலையில், இதுவிரைவில் 350 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்றுஅமைச்சர் குறிப்பிட்டார். மேலும் 2030 வாக்கில் இந்த அளவை 500 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தவேண்டும் என்று தாம் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

ஆயத்த ஆடைகள் துறையில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தை ரூ.10,000 கோடி அளவுக்கு விரிவுபடுத்துவதாக அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவித்தார். இந்தக் கண்காட்சியையொட்டி பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

”உலகின் எந்த மூலையில் இருந்தா ...

”உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்” – பிரதமர் மோடி ''உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்'' என ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர் ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர்கள் கண்டனம் கவலை அளிக்கிறது! காஷ்மீரில் இருந்து வரும் செய்தி கவலை அளிக்கிறது. ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அ ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை சவுதி அரேபியாவில் இருந்து நேற்று டில்லி திரும்பிய பிரதமர் ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு & ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு – தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாக்., உறவை துண்டித்துக் ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவ ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவில் பதிலடி – ராஜ்நாத் சிங் ஜம்மு - -காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...