பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க உற்பத்தி வசதிகளை மேம்படுத்துவது அவசியம் கிரிராஜ் சிங்

புதுதில்லியில் உள்ள யஷோ பூமி மாநாட்டு மையத்தில் 71-வது இந்திய சர்வதேச ஆயத்த ஆடை கண்காட்சியை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் இன்று தொடங்கிவைத்தார். இந்தக் கண்காட்சி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் ஏற்றுமதியாளர்களுக்கு தனித்துவமான சந்தைத் தளமாகும் என்றும் உலகத்திற்கு இந்தியாவின் நவீன போக்குகள் மற்றும் பலவகையான தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதாகஇருக்கும் என்றும் அமைச்சர்  தொடக்க உரையில் குறிப்பிட்டார். இந்தியாவில் உற்பத்தி என்ற பிரதமரின்தொலைநோக்குப் பார்வையை நனவாக்க உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என்று அவர் கூறினார்.

இந்தியா தற்போது 7.2 சதவீத ஜிடிபி வளர்ச்சி விகிதத்துடன் வேகமாக வளர்ந்துவரும் உலகப் பொருளாதாரங்களில் ஒன்றாக  உள்ளது என்றும் 2027-28-ல் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் ஆயத்த ஆடைகள் மற்றும் ஜவுளிகளின் சந்தைமதிப்பு தற்போது 165 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் நிலையில், இதுவிரைவில் 350 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்றுஅமைச்சர் குறிப்பிட்டார். மேலும் 2030 வாக்கில் இந்த அளவை 500 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தவேண்டும் என்று தாம் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

ஆயத்த ஆடைகள் துறையில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தை ரூ.10,000 கோடி அளவுக்கு விரிவுபடுத்துவதாக அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவித்தார். இந்தக் கண்காட்சியையொட்டி பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...