பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க உற்பத்தி வசதிகளை மேம்படுத்துவது அவசியம் கிரிராஜ் சிங்

புதுதில்லியில் உள்ள யஷோ பூமி மாநாட்டு மையத்தில் 71-வது இந்திய சர்வதேச ஆயத்த ஆடை கண்காட்சியை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் இன்று தொடங்கிவைத்தார். இந்தக் கண்காட்சி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் ஏற்றுமதியாளர்களுக்கு தனித்துவமான சந்தைத் தளமாகும் என்றும் உலகத்திற்கு இந்தியாவின் நவீன போக்குகள் மற்றும் பலவகையான தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதாகஇருக்கும் என்றும் அமைச்சர்  தொடக்க உரையில் குறிப்பிட்டார். இந்தியாவில் உற்பத்தி என்ற பிரதமரின்தொலைநோக்குப் பார்வையை நனவாக்க உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என்று அவர் கூறினார்.

இந்தியா தற்போது 7.2 சதவீத ஜிடிபி வளர்ச்சி விகிதத்துடன் வேகமாக வளர்ந்துவரும் உலகப் பொருளாதாரங்களில் ஒன்றாக  உள்ளது என்றும் 2027-28-ல் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் ஆயத்த ஆடைகள் மற்றும் ஜவுளிகளின் சந்தைமதிப்பு தற்போது 165 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் நிலையில், இதுவிரைவில் 350 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்றுஅமைச்சர் குறிப்பிட்டார். மேலும் 2030 வாக்கில் இந்த அளவை 500 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தவேண்டும் என்று தாம் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

ஆயத்த ஆடைகள் துறையில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தை ரூ.10,000 கோடி அளவுக்கு விரிவுபடுத்துவதாக அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவித்தார். இந்தக் கண்காட்சியையொட்டி பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலு ...

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரை பற்றி மோடி  விளக்கம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரை, விரிவானதாக ...

நாடாளுமன்றத்தில் குடியரசுத்தல ...

நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரை மாண்புமிகு உறுப்பினர்களே, 1.18-வது மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் ...

மாநிலங்களவை 264-வது அமர்வையொட்டி ...

மாநிலங்களவை 264-வது அமர்வையொட்டி ஜெக்தீப் தன்கர் ஆற்றிய உரை மாண்புமிகு உறுப்பினர்களே, மாநிலங்களவையின் 264-வது அமர்வு தொடங்குவதையொட்டி, உங்கள் ...

உதயநிதி வெளியிட்ட புதிய லோகோ- வ ...

உதயநிதி வெளியிட்ட புதிய லோகோ- விளையாட்டு வீரர்கள் அதிருப்தி அமைச்சர் உதயநிதி வெளியிட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய 'லோகோ' ...

செங்கோல் நேர்மையான ஆட்சியின் அ ...

செங்கோல் நேர்மையான ஆட்சியின் அடையாளம் -L .முருகன் பேட்டி ஆட்சி நேர்மையாகவும், நீதி தவறாமல் இருக்கவும் சோழர்கள் பயன்படுத்தியதுதான் ...

மக்களவை தலைவருக்கு மோடி பாராட் ...

மக்களவை தலைவருக்கு மோடி பாராட்டு அவசர நிலை மற்றும் அதனால் ஏற்பட்ட அதிகப்படியான அத்துமீறல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...