கருணாநிதிக்கு வைரவிழா எடுக்கிறார்கள்! வாழ்த்துகிறோம்!! மகிழ்கிறோம்!

 
இதை, ஒரு தனி மனிதனின் அயராத உழைப்பு, விடா முயற்சிக்கான சாதனை என்ற அளவில், ஒரு மைல்கல் என்று வேண்டுமானால் கூறலாமே தவிர, ஒட்டுமொத்த தமிழகமோ, தமிழினமோ, ஏன் தி.மு.க.வோ கூட மகிழும்படியான நிகழ்வல்ல என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்!
 
இன்று தமிழகம் சந்திக்கும் பிரச்சனைகள் எதுவாயினும், அதில் ஏதோ ஒரு பங்களிப்பை கருணாநிதி செய்திருப்பார். ஒன்று அந்த பிரச்சனைகளுக்கு வித்திட்டிருப்பார் அல்லது நீரூற்றி வளர்த்திருப்பார்! அதே போன்றுதான் தமிழினத்திற்கும், தி.மு.க.விற்கும் சேவை புரிந்திருப்பார்! காவிரி, ஊழல், தமிழ், நில அபகரிப்பு, கச்சத்தீவு, மாநில சுயாட்சி, மணல், தாது கொள்ளை, மது விற்பனை, இலங்கை என்று எத்தகைய பிரச்சனையும் அவர் கைவண்ணமின்றி சீர் கெட்டதில்லை!
 
இந்த விழா தமிழ்நாட்டிற்கு எந்தவொரு பெருமையையும் சேர்க்காது! இருந்தும், அது தமிழனுக்கு கிடைத்த வரம் என்ற வகையில்தான் விழா ஏற்பாட்டாளர்கள் பேசுவார்கள்!
 
சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு, தள்ளாத வயதில், கொட்டும் மழையில் கோலூன்றி, முதல்வர் வீடேறிச் சென்று, "மதுக்கடைத் திறக்காதீர்" என்று கேட்டுக்கொண்ட அந்த பெரியவரை, குல்லுக பட்டர் என்று ஏளனம் செய்த கோமாளிக் கூட்டங்களைப் புரிந்து கொண்டு மக்கள் இன்று கூட்டங்கூட்டமாக சென்று, சாராயக் கடைகளை அடித்து நொறுக்குகின்றனர்! இது ஒரு சாம்பிள்தான்! 
 
இந்த கோமாளிகளின் இன்னபிற தீவினைகளைப் புரிந்து கொண்டு மக்கள் விழிப்புநிலை அடையும் நாள் வெகு அருகில்தான் இருக்கிறது!!

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...