கருணாநிதிக்கு வைரவிழா எடுக்கிறார்கள்! வாழ்த்துகிறோம்!! மகிழ்கிறோம்!

 
இதை, ஒரு தனி மனிதனின் அயராத உழைப்பு, விடா முயற்சிக்கான சாதனை என்ற அளவில், ஒரு மைல்கல் என்று வேண்டுமானால் கூறலாமே தவிர, ஒட்டுமொத்த தமிழகமோ, தமிழினமோ, ஏன் தி.மு.க.வோ கூட மகிழும்படியான நிகழ்வல்ல என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்!
 
இன்று தமிழகம் சந்திக்கும் பிரச்சனைகள் எதுவாயினும், அதில் ஏதோ ஒரு பங்களிப்பை கருணாநிதி செய்திருப்பார். ஒன்று அந்த பிரச்சனைகளுக்கு வித்திட்டிருப்பார் அல்லது நீரூற்றி வளர்த்திருப்பார்! அதே போன்றுதான் தமிழினத்திற்கும், தி.மு.க.விற்கும் சேவை புரிந்திருப்பார்! காவிரி, ஊழல், தமிழ், நில அபகரிப்பு, கச்சத்தீவு, மாநில சுயாட்சி, மணல், தாது கொள்ளை, மது விற்பனை, இலங்கை என்று எத்தகைய பிரச்சனையும் அவர் கைவண்ணமின்றி சீர் கெட்டதில்லை!
 
இந்த விழா தமிழ்நாட்டிற்கு எந்தவொரு பெருமையையும் சேர்க்காது! இருந்தும், அது தமிழனுக்கு கிடைத்த வரம் என்ற வகையில்தான் விழா ஏற்பாட்டாளர்கள் பேசுவார்கள்!
 
சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு, தள்ளாத வயதில், கொட்டும் மழையில் கோலூன்றி, முதல்வர் வீடேறிச் சென்று, "மதுக்கடைத் திறக்காதீர்" என்று கேட்டுக்கொண்ட அந்த பெரியவரை, குல்லுக பட்டர் என்று ஏளனம் செய்த கோமாளிக் கூட்டங்களைப் புரிந்து கொண்டு மக்கள் இன்று கூட்டங்கூட்டமாக சென்று, சாராயக் கடைகளை அடித்து நொறுக்குகின்றனர்! இது ஒரு சாம்பிள்தான்! 
 
இந்த கோமாளிகளின் இன்னபிற தீவினைகளைப் புரிந்து கொண்டு மக்கள் விழிப்புநிலை அடையும் நாள் வெகு அருகில்தான் இருக்கிறது!!

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

மருத்துவ செய்திகள்

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...