தமிமொழியை கற்றுகொள்ளுங்கள் வெளிமாநிலத்தவர்களுக்கு கவர்னர் அறிவுரை

‘அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் தமிழகத்தில் உள்ளனர். அவர்கள் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும்,” என கவர்னர் ரவி அறிவுரை வழங்கினார்.

அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் உருவான தின விழா, கிண்டி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:

மாநிலங்கள் உருவான தின கொண்டாட்டம், நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகள், கல்லுாரி பொது இடங்களிலும், நடக்க வேண்டும். இந்தியா ஒரு பரந்த நாடு. நிறைய பன்முகத்தன்மை கொண்டது.

நம் நாட்டின் பன்முகத் தன்மைக்கு, எந்த நாடும் நிகராக முடியாது. அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், பலர் தமிழகத்தில் உள்ளனர். அவர்கள் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழ் தெரிந்தால், உங்களுக்கு தமிழகம் குறித்த பல தகவல்கள் தெரியவரும். எனக்கு தமிழில் பேசினால் புரிந்து கொள்ள முடியும். செய்தித் தாள்களை படிக்க முடிகிறது. கேரளாவில் பணி செய்யும்போது, மலையாளம் கற்றுக்கொண்டேன்.

தமிழ் நண்பர்கள் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களை, விடுமுறை நாட்களில், உங்கள் பகுதிக்கு அழைத்து சென்று, பந்தத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். எனக்கு பல மாநிலங்களில் நட்பு வட்டாரம் உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில், ரயில் சேவைகள், விமான நிலையங்கள், இன்று ஏராளமாக வளர்ந்து விட்டன. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும், ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து சேவை மேம்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு, மாநிலங்களின் பந்தம் முக்கியமானதாக இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள், இந்தியாவின் எதிர்காலம் என்ற அளவுக்கு மனிதவளம், இயற்கை வளங்கள் உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“திருவனந்தபுரத்தில் பாஜக பெற் ...

“திருவனந்தபுரத்தில் பாஜக பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல..” – பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக தாம்பரம் வரை இயக்கப்படும் ...

பிரதமர் மோடியை சிலிர்க்கவைத்த ...

பிரதமர் மோடியை சிலிர்க்கவைத்த சிறுமியின் கைவண்ணம் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு சிறுமியின் கையில் இருந்த ஓவியத்தை ...

மாறாதது இனி மாறும் – பிரதமர் ம ...

மாறாதது இனி மாறும் – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ...

சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெரு ...

சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் பிரதமர் நரேந்திரயின்  மோடி உரை சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் காணொலிக்காட்சி மூலம் இன்று நிகழ்த்திய ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் என்  தலைவா் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் 1980-ஆம் ஆண்டு, ஜனதா ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்ட ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன் அதிமுக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் ...

மருத்துவ செய்திகள்

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...