நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை

”கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப வேண்டும். அப்படி செய்யும்போதுதான், முழுமையாக கலப்படத்தை தவிர்க்க முடியும்,” என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரி மற்றும் கோவை அறம் அறக்கட்டளை சார்பில், நூல் வெளியீட்டு விழா, கல்லூரி அரங்கத்தில் நடந்தது.

கோவை அறம் அறக்கட்டளை தலைவர் ரகுராம் தொகுத்து எழுதிய, ‘மறைந்திருக்கும் மர்மம்’ என்ற, கலப்படத்தை கண்டறிவது தொடர்பான நுாலை, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் மற்றும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டனர்.

பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

தமிழகத்தில், 2021ம் ஆண்டு மே முதல் 2022ம் ஆண்டு டிசம்பர் வரை, உணவு பாதுகாப்புத் துறையினர், 38 ஆயிரத்து 980 உணவு மாதிரிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில், 28 சதவீதம் மாதிரிகள், பயன்படுத்த முடியாத அல்லது தரம் இல்லாதவை என தெரியவந்துள்ளது. உலக அளவில், 2020ம் ஆண்டு, 4.20 லட்சம் பேர் கலப்பட உணவால் உயிரிழந்துள்ளனர். கலப்பட உணவை, உணவு பாதுகாப்புத்துறையினர்தான் கண்டுபிடிக்க வேண்டும் என, நாம் இருக்கக்கூடாது. கலப்பட பொருட்களை நாமே கண்டுபிடிக்கலாம்.

கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாமே கேள்வி எழுப்ப வேண்டும். அப்படி செய்யும்போதுதான், முழுமையாக கலப்படத்தை தவிர்க்க முடியும். 2023ம் ஆண்டு, உலக அளவில் கண்டறியப்பட்ட போலி பொருட்களில், 71 சதவீதம் போலிப் பொருட்கள் சீனாவில் உற்பத்தியானது என சர்வே கூறுகிறது.

நம் நாடு அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால், இன்னும், 10 ஆண்டுகளில், புரதச்சத்து உணவிற்கு தட்டுப்பாடு ஏற்படும்.

வரும் 2047ல், இந்தியா, 55 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும். அதற்கு, நாம் வளர வேண்டும். ஒரு மனிதனின் வளர்ச்சியை போலவே நாட்டின் வளர்ச்சியும் இருக்கும். இப்போது நீங்களும் இளமையாக இருக்கிறீர்கள்; நாடும் இளமையாக உள்ளது.

இவ்வாறு, அண்ணாமலை பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...