நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை

”கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப வேண்டும். அப்படி செய்யும்போதுதான், முழுமையாக கலப்படத்தை தவிர்க்க முடியும்,” என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரி மற்றும் கோவை அறம் அறக்கட்டளை சார்பில், நூல் வெளியீட்டு விழா, கல்லூரி அரங்கத்தில் நடந்தது.

கோவை அறம் அறக்கட்டளை தலைவர் ரகுராம் தொகுத்து எழுதிய, ‘மறைந்திருக்கும் மர்மம்’ என்ற, கலப்படத்தை கண்டறிவது தொடர்பான நுாலை, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் மற்றும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டனர்.

பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

தமிழகத்தில், 2021ம் ஆண்டு மே முதல் 2022ம் ஆண்டு டிசம்பர் வரை, உணவு பாதுகாப்புத் துறையினர், 38 ஆயிரத்து 980 உணவு மாதிரிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில், 28 சதவீதம் மாதிரிகள், பயன்படுத்த முடியாத அல்லது தரம் இல்லாதவை என தெரியவந்துள்ளது. உலக அளவில், 2020ம் ஆண்டு, 4.20 லட்சம் பேர் கலப்பட உணவால் உயிரிழந்துள்ளனர். கலப்பட உணவை, உணவு பாதுகாப்புத்துறையினர்தான் கண்டுபிடிக்க வேண்டும் என, நாம் இருக்கக்கூடாது. கலப்பட பொருட்களை நாமே கண்டுபிடிக்கலாம்.

கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாமே கேள்வி எழுப்ப வேண்டும். அப்படி செய்யும்போதுதான், முழுமையாக கலப்படத்தை தவிர்க்க முடியும். 2023ம் ஆண்டு, உலக அளவில் கண்டறியப்பட்ட போலி பொருட்களில், 71 சதவீதம் போலிப் பொருட்கள் சீனாவில் உற்பத்தியானது என சர்வே கூறுகிறது.

நம் நாடு அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால், இன்னும், 10 ஆண்டுகளில், புரதச்சத்து உணவிற்கு தட்டுப்பாடு ஏற்படும்.

வரும் 2047ல், இந்தியா, 55 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும். அதற்கு, நாம் வளர வேண்டும். ஒரு மனிதனின் வளர்ச்சியை போலவே நாட்டின் வளர்ச்சியும் இருக்கும். இப்போது நீங்களும் இளமையாக இருக்கிறீர்கள்; நாடும் இளமையாக உள்ளது.

இவ்வாறு, அண்ணாமலை பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...